• June 7, 2025

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா

 கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம்-நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி நடைபெற்றது.

விழாவிற்கு கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கர்கணேஷ் தலைமை தாங்கினார்.

புதிய கட்டிடத்தையும்,புத்தக கண்காட்சியையும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி  பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி மாரிக்காளை, முனிசீப் நீதிபதி கருப்பசாமி, விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் கடற்கரைசெல்வன்,பீட்டர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க செயலாளர் ஜெயசீலன்,பொருளாளர் ரேவதி, துணைத் தலைவர் சிவனுபாண்டி, துணைச் செயலாளர் முனீஸ்வரி, அரசு வழக்கறிஞர் சம்பத்குமார், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *