தீவிபத்தில் சேதம்: அனல்மின் நிலையத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்; மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீ விபத்தில் அனல்மின் முதலாவது மற்றும் இரண்டாவது யூனிட்டுகள் முற்றிலும் எரிந்து சேதம் ஆகி உள்ளது. இதன் காரணமாக 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் இந்த பணிகளை சரி செய்ய 6 மாதம் ஆகும் என்று சொல்லபப்டுகிறது,. சேதமடைந்த பகுதிகளை சீர் செய்ய முதலில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில் தமிழக அரசு தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை சரி செய்யவும் யூனிடு 1 மற்றும் யூனிட் 2 ஆகியவற்றை சீர் செய்து போர்க்கால அடிப்படையில் மீண்டும் மின் உற்பத்தி நடக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வரக்கூடிய மே, ஜூன் மாதங்களில் மின் தேவை அதிகம் இருப்பதால் உடனடியாக இந்த பணிகளை தொடங்க வேண்டும். என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் செயலாளர் அப்பாதுரை தமிழக அரசுக்கு மற்றும் மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த பணிகளில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட மின்வாரிய ஊழியர்கள் தயாராக உள்ளனர். எனவே தமிழக அரசும் மின்வாரியமும் இந்த பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே அனல் மின் நிலையத்தில் தீவிபத்து நடந்தது எப்படி? இதில் கவனக்குறைவாக இருந்தவர்கள் யார் என்பது பற்றிய இலாகாப்பூர்வ விசாரணை நடைபெற்று வருகிறது,
