• June 7, 2025

சாதி, மத ரீதியான மோதலை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால் கடும் நடவடிக்கை ; ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை  

 சாதி, மத ரீதியான மோதலை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால் கடும் நடவடிக்கை ; ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை  

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மத ரீதியாக மோதல்களை தூண்டும் வகையிலோ, தலைவர்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்தோ, ஆயுதங்களுடன் புகைப்படம் அல்லது பாடல்களை ஒலிக்கச் செய்து இரு பிரிவினருக்கிடையே மோதலையோ, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்பவர்களை மாவட்ட காவல்துறை கண்காணித்து வருகிறது.’

கடந்த 6 மாதங்களில் மட்டும் இது போல் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 பேரை  கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு சமூக வலைதளங்களில் தவறான  பதிவுகளால்  ஏற்படும் விளைவுகள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு போன்றவை குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மத ரீதியான மோதலை ஏற்படுத்தும் வகையிலோ, பிற சாதியினரை புண்படுத்தும் வகையிலோ, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலோ பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாம். மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,

இவ்வாறு ஆல்பர்ட் ஜான் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடியில் 689 பேருக்கு பிடியாணை : மாவட்ட காவல்துறை நடவடிக்கை!

நிறுத்தப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *