தொழில், வியாபாரம் ,கல்வி, விவசாயம், பொதுமக்கள் நலன் சிறக்க மற்றும் மழை வேண்டி 252 பால்குடம் ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது.சென்பகவல்லி அம்மன் கோவில் முன்பிருந்து ஆண், பெண், பக்தர்கள் 252 பேர் பால்குடம் சுமந்து ஊர்வலம் புறப்பட்டனர், சில சிறுமிகளும் ஊர்வலத்தில் பங்கேற்றனர், பால்குடம் ஊர்வலம் ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு எட்டையபுரம் ரோடு, மாதாங்கோவில் தெரு, கிருஷ்ணன்கோவில் தெரு, மார்க்கெட் ரோடு, தெற்கு பஜார் வழியாக செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு மீண்டும் வந்து […]
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் சூழ்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக ஊராட்சி பகுதிகளில் ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் ஒவ்வொரு பகுதியாக சென்று முகாம் நடத்தி தடுப்பூசி போட்டு வருகிறார்கள். இந்த பணி கடந்த 15-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறதுஇளையரசனேந்தல் ஆரம்ப சுகாதார மையம் சார்பில் நேற்று கோவில்பட்டி சுபா நகரில் முகாம் நடத்தப்பட்டது. இன்று புது அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன் […]
அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வான தூத்துக்குடி வடக்கு ,மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். இந்த பொறுப்புக்கு அவரை கட்சியின் தற்காலிக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்திருக்கிறார்.அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கடம்பூர் ராஜு இன்று சென்னையில் இருந்து விமானம்மூலம் தூத்துக்குடி வந்தார்.விமான நிலையத்தில் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோவில்பட்டி வந்தார். அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே உள்ள எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு […]
188 நாடுகள் பங்கேற்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடக்க இருக்கிறது. இப்போட்டி முதன் முதலாக இந்தியாவில் தமிழகத்தில் நடைபெற உள்ளது. எனவே பெருமைமிக்க இந்த விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு சின்னம் ( Emblem) உருவாக்கி அரசு பள்ளி மாணவர்களையும் அதில் கலந்து கொள்ள ஊக்குவிகிறது.கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 700 மாணவிகளைக் கொண்டு செஸ் ஒலிம்பியாட் சின்னம் உருவாக்கினர். சீருடை அணிந்த மாணவிகள் ஒலிம்பியாட் சின்னம் போல் வடிவமைத்து நின்ற […]
கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரத்தில் ஜே.எஸ். டபிள்யூ. எனர்ஜி லிமிடெட் பவுண்டேஷனின் சமூக பங்களிப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜே.எஸ்.டபிள்யூ. எனர்ஜி லிமிடெட்டின் தூத்துக்குடி தலைமை நிர்வாகி தென்னவன் தலைமை தாங்கினார். சமூகப் பங்களிப்பு நிதி உதவி திட்ட மண்டல நிர்வாகிகள் பாரதி, சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வேலாயுதபுரத்தில் இருந்து ரெயில் நிலையம், புதுரோடு வழியாக தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலை மிகுந்த நெருக்கடியில் உள்ளது. ரெயில் நிலையத்தில் இருந்து புதுரோடு சந்திப்பு சாலையில் கனரக வாகனங்கள் திரும்புவதற்கு பெரும் சிரமப்படுகின்றன,ஏற்கனவே மின் பஸ்கள் சாலையின் நடுவே நிறுத்தி பயணிகளை ஏற்றவும், இறக்கவும் செய்கிறார்கள். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் அந்த பகுதியை கடக்க முடியாமல் நீண்ட நேரம் நின்று செல்கின்றன.போக்குவரத்து போலீசார் இருந்தாலும் இந்த நிலைதான்.இதன் காரணமாக கோவில்பட்டி ஊருக்குள் கனரக […]
மகாபலிபுரத்தில் வருகிற ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் வழிகாட்டுதலின்படி நேரு யுவ கேந்திரா சார்பில் கலைக்குழு மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபடுகிறது,.முதற்கட்டமாக கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில் அண்ணா பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கலை விழா நிகழ்வுக்கு ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் தேன் ராஜா, காந்திஜி கஸ்தூரிபாய் […]
கோவில்பட்டி அருகே உள்ள நாகம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் சிவராமச்சந்திரன் (வயது 29). இவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். சிவராமச்சந்திரன் தனது மனைவி வசந்தகுமாரி மற்றும் 2 மகன்களுடன் கோவில்பட்டியில் உள்ள, தியேட்டரில் சினிமா பார்க்க வந்தார். சினிமா முடிந்து இரவு 10 மணி அளவில் ஊருக்கு மனைவி, மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.கரிசல்குளம் அருகே சென்றபோது 4 மர்ம நபர்கள் திடீரென்று அரிவாள், கம்புகளுடன் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர். […]
கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளம் கீழகாலனியை சே ர்ந்தவர் சுப்பையா (வயது 75). விவசாயி. இவருடைய மனைவி காளியம்மாள் (70). இவர்களுக்கு கனகராஜ் (45), ஜெயக்குமார் (42) ராமநாதன் (38) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். ஜெயக்குமார், முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.கடந்த 15-ந்தேதி இரவில் ஜெயக்குமார் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு சென்று தாயார் காளியம்மாளிடம் தகராறு செய்தார். இதனை தந்தை சுப்பையா கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே […]
கோவில்பட்டி அருகே ஜமீன்தேவர்குளத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணறு தூர்வாரும் பணி நடந்தது. இந்த பணியில் திருவேங்கடம் அருகே குலசேகரன்கோட்டை கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் வயது உள்பட 5 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் மாலை பாலகிருஷ்ணன் கிணற்றுக்குள் இறங்கி, அங்கு தோண்டிய பாறைகள், மண்ணை வெளியே தூக்கி விடும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் இருந்த கல் எதிர்பாராதவிதமாக பாலகிருஷ்ணன் மீது சரிந்து விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். உடனே அவரை வேனில் ஏற்றி […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
