சர்வதேச செஸ் ஒலிம்பியாட்: கோவில்பட்டியில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

மகாபலிபுரத்தில் வருகிற ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் வழிகாட்டுதலின்படி நேரு யுவ கேந்திரா சார்பில் கலைக்குழு மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபடுகிறது,.
முதற்கட்டமாக கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில் அண்ணா பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கலை விழா நிகழ்வுக்கு ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் தேன் ராஜா, காந்திஜி கஸ்தூரிபாய் மகளிர் மன்ற ஆலோசகர் விஜயன், ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், தெற்கு திட்டங்குளம் மகளிர் மன்ற தலைவி ரஞ்சித மணி, நேரு யுவ கேந்திரா தேசிய இளையோர் தொண்டர்கள் தங்க மாரியப்பன், மாரி செல்வகுமார் , கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுடலைமணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை அன்பு மித்ரா கலைக்குழுவினர் நடத்தினர். இதனை பொதுமக்கள் கண்டுகளித்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திரா இசக்கி செய்திருந்தார்.
