கிடப்பில் போடப்பட்ட லிங்கம்பட்டி சாலை திட்டம்….

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வேலாயுதபுரத்தில் இருந்து ரெயில் நிலையம், புதுரோடு வழியாக தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலை மிகுந்த நெருக்கடியில் உள்ளது. ரெயில் நிலையத்தில் இருந்து புதுரோடு சந்திப்பு சாலையில் கனரக வாகனங்கள் திரும்புவதற்கு பெரும் சிரமப்படுகின்றன,
ஏற்கனவே மின் பஸ்கள் சாலையின் நடுவே நிறுத்தி பயணிகளை ஏற்றவும், இறக்கவும் செய்கிறார்கள். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் அந்த பகுதியை கடக்க முடியாமல் நீண்ட நேரம் நின்று செல்கின்றன.போக்குவரத்து போலீசார் இருந்தாலும் இந்த நிலைதான்.
இதன் காரணமாக கோவில்பட்டி ஊருக்குள் கனரக லாரிகள் வராமல் தோட்டலாம்பட்டி விலக்கில் இருந்து புறவழிச் சாலை லிங்கம்பட்டி வழியாக தூத்துகுடி செல்லும் வகையில் ஒரு திட்டத்தை நெடுஞ்சாலை துறை கொண்டு வந்துள்ளது.
இதற்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டு சாலைகள் சந்திக்க இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரைபடங்கள் வரையப்பட்டதுடன் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
தற்போதையை போக்குவரத்து நெரிசலை கவனத்தில் கொண்டு உடனே உடனே இந்த திட்டத்தை தொடக்க நெடுஞ்சாலை துறை முன் வரவேண்டும். இந்த தருணத்தில் இந்த திட்டத்தை கொண்டுவந்தால் நன்றாக இருக்கும். கோவில்பட்டி நகரின் உள்ளே போக்குவரத்து நெரிசல் குறையும். அதிக எடை கொண்ட வாகனங்கள் அதிகமாக வருவதால் விபத்து ஏற்படுவதுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி குழந்தைகள் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இந்த திட்டம் செயல்பட்டால் விபத்துக்கள் குறையும் இங்கு செல்லக்கூடிய பள்ளி குழந்தைகள் ரெயில் நிலையம் செல்வோர், பத்திர ஆபீஸ் செல்வோர் தாலுகா ஆபீஸ், கோர்ட், அரசு மருத்துவமனை செல்வோர் மிக வேகமாக செல்லலாம். எனவே சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இந்த திட்டத்தை உடனே அமலுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
