சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயகுமார் தேர்வு

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அடையார் பார்க் ஓட்டலில் ஞாயிற்றுகிழமை மாலை நடைபெற்றது.
கட்சியின் இடைக்கால பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பில் சட்டமன்ற துணை தலைவர் மற்றும் துணை செயலாளராக கீழ்க்கண்டவர்கள், கீழ்க்காணும் பதவிகளுக்கு கழக சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தடுக்கப்பட்டுள்ளார்கள்.
துணைத்தலைவர்: ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.(திருமாங்கலம் தொகுதி)
துணை செயலாளர்:அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ.(போளூர் தொகுதி)
மேற்கண்ட தகவலை எடப்பாடி பழனிசாமி இன்று தெரிவித்துள்ளார்.
