• June 8, 2025

சினிமா பார்க்க வந்த தம்பதியை வழிமறித்து நகை பறிப்பு

 சினிமா பார்க்க வந்த தம்பதியை வழிமறித்து நகை பறிப்பு

கோவில்பட்டி அருகே உள்ள நாகம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் சிவராமச்சந்திரன் (வயது 29). இவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். சிவராமச்சந்திரன் தனது மனைவி வசந்தகுமாரி மற்றும் 2 மகன்களுடன் கோவில்பட்டியில் உள்ள, தியேட்டரில் சினிமா பார்க்க வந்தார். சினிமா முடிந்து இரவு 10 மணி அளவில் ஊருக்கு மனைவி, மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.
கரிசல்குளம் அருகே சென்றபோது 4 மர்ம நபர்கள் திடீரென்று அரிவாள், கம்புகளுடன் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர். அரிவாளை காட்டிய மிரட்டிய அவர்கள், வசந்தகுமாரி அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி, 5 கிராம் எடையுள்ள கம்மல், காது மாட்டி ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இந்த துணிகர வழிப்பறி சம்பவம் குறித்து சிவராமச்சந்திரன் கொப்பம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்- இன்ஸ்பெக்டர் துரைசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *