கோவில்பட்டியில் பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலம்

தொழில், வியாபாரம் ,கல்வி, விவசாயம், பொதுமக்கள் நலன் சிறக்க மற்றும் மழை வேண்டி 252 பால்குடம் ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது.
சென்பகவல்லி அம்மன் கோவில் முன்பிருந்து ஆண், பெண், பக்தர்கள் 252 பேர் பால்குடம் சுமந்து ஊர்வலம் புறப்பட்டனர், சில சிறுமிகளும் ஊர்வலத்தில் பங்கேற்றனர், பால்குடம் ஊர்வலம் ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு எட்டையபுரம் ரோடு, மாதாங்கோவில் தெரு, கிருஷ்ணன்கோவில் தெரு, மார்க்கெட் ரோடு, தெற்கு பஜார் வழியாக செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு மீண்டும் வந்து சேர்ந்தது.

இதை தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடந்தது. பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ ஹரிகரன் அய்யப்ப பக்தர்கள் சேவா சங்கம், அம்பாள் சுவாமி பாலபிஷேக குழுவினர் செய்திருந்தனர்,
இன்று இரவு 7 மணிக்கு அம்பாள் அமர்ந்த கோலத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
