கோவில்பட்டி புதுக்கிராமம் அருகே சிவாஜி நகரை சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் பாலமுருகன்(வயது 3௦). கட்டிட தொளிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு ஆளானவர்இந்த நிலையில் பாலமுருகனின் தந்தை பெருமாள்சாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவரிடம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த வடிவேலு மகன் முத்துராஜ்(39) என்பவர் ரூ.1௦ ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பாலமுருகனை முத்துராஜ் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் […]
முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ இன்று தனது 63- வது பிறந்தநாளை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கேக்’ வெட்டி கொண்டாடினார்.கோவில்பட்டியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த `கேக்’ வெட்டும் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மாலை மற்றும் சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.அவர்களின் வாழ்த்துகளை பெற்றுக்கொண்ட கடம்பூர் ராஜூ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டினார். அப்போது கூடி இருந்தவர்கள் வாழ்த்து கோஷம் […]
கோவில்பட்டியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 78-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. பழைய பஸ் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் கே.காமராஜ் தலைமையில் பொருளாளர் காமராஜ் திருப்பதிராஜா இனிப்பு வழங்கினார். மாவட்ட செயலாளர் பிரேம்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரிமுத்து, எஸ்.சி.மற்றும் எஸ்.டி.பிரிவு மாநில தலைவர் அருண்பாண்டியன், கோவில்பட்டி நகர தலைவர் பங்காருசாமி, துணை தலைவர் ராஜசேகர், ஐ.என்.டி.யு.சி.சுந்தரராஜ், வேல்சாமி, […]
கோவில்பட்டி அருகே வெள்ளாளன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பெரியதாய் என்பவர் உயிரிழந்தை தொடர்ந்து. கடந்த ஜூலை மாதம் அந்த ஊராட்சிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் ஊராட்சி தலைவர் பதவிக்கு வெயிலாட்சி, லாவண்யா இருவரும் போட்டியிட்டனர். இதில் வெயிலாட்சி வெற்றி பெற்றார். இந்நிலையில் வெள்ளாளன்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட சூரியமினுக்கன் கிராமத்தினை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்களுக்கு ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வெயிலாட்சிக்கு ஆதரவாக வேலை செய்யவில்லை என்று கூறி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை […]
கோவில்பட்டி புதுக்கிராமம் சிவாஜி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாலமுருகன் (வயது 30) என்பவர், வள்ளுவர் நகரைச் சேர்ந்த முத்துராஜ்(39) என்பவருக்கு ரூ.10 ஆயிரம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.சில மாதங்கள் கழித்து நேற்று, கடனாக கொடுத்த பணத்தை பாலமுருகன் திரும்பி கேட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் பணத்தை தருவவதாக முத்துராஜ் கூறியுள்ளார். இருந்த போதிலும் பணம் உடனடியாக வேண்டும் என்று கூறி மது போதையில் இருந்த பாலமுருகன், முத்துராஜிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ் கத்தியால் பாலமுருகனை […]
கோவில்பட்டியில் போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் நலச்சங்கம் சார்பில் உலக புகைப்படதினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பஸ் நிலையம் அருகே உள்ள பயணியர் மாளிகை முன்பிருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, நகர்மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோர் , பச்சை கொடியை அசைத்து பேரணியை தொடக்கி வைத்தனர். பேரணியில் கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர், போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்க கவுரவ தலைவர் பிச்சையா, தலைவர் ராமச்சந்திரன், […]
மதுரையில் இருந்து சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் ஏற்றிக்கொண்டு கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த மினி லாரியை மதுரையை சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டி வந்தார்.இன்று அதிகாலை வேளையில் எட்டயபுரம் தாண்டி திட்டங்குளம் அருகே வந்தபோது எதிரே வந்த பைக்கின் மீது மோதாமல் இருக்க பிரேக் அடித்தபோது கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி அருகில் உள்ள கால்வாய் ஓடையில் மீது ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது=இந்த விபத்தில் மினி லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். லாரியில் […]
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவில்பட்டி நகர தலைவர் கே.பி.ராஜகோபால், நகர செயலாளர் டி.மூர்த்தி ஆகியோர் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.க்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள துணை மின் நிலையம் அருகே கடந்த 15ஆம் தேதி காலை நடந்த விபத்தில் பள்ளி மாணவர் ஸ்ரீ புஷ்பராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் போது, விபத்தை பார்த்தும் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிய ஓட்டுநரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. மனிதாபிமானம் இல்லாத ஓட்டுநரின் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற கலெக்டர் உத்தரவு நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம் வசூல் முறை பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. அப்போது கூடுதல் தொகை வரும்வகையில் மீட்டருக்கு சூடு வைத்து டிரைவர்கள் ஓட்ட தொட்ங்கினார்கள்.நாளடைவில் மீட்டர் கட்டணம் முறையை மறந்து குத்து மதிப்பாக கட்டணம் வசூல் செய்ய தொடங்கி விட்டார்கள். இது ஆட்டோ டிரைவர்களுக்கு மிகவும் வசதியாகி விட்டது. அவர்கள் வைத்தது தான் […]
கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு லெனின் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன்- கருப்பசாமி திருக்கோயில் ஆடி மாத கொடை விழாவை முன்னிட்டு கடந்த 9-ம் தேதி அன்று நாள்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று ஆடி கடைசி செவ்வாய்கிழமை காலையில் பால்குடம் ஊர்வலம், அக்கினி சட்டி ஊர்வலமும், அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது, இதில் கோயில் பூசாரி ஜோதி, கோவில் தலைவி பாக்கியலட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
