கோவில் விழா: பக்தர்கள் பால் குடம் சுமந்து ஊர்வலம்

கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு லெனின் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன்- கருப்பசாமி திருக்கோயில் ஆடி மாத கொடை விழாவை முன்னிட்டு கடந்த 9-ம் தேதி அன்று நாள்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று ஆடி கடைசி செவ்வாய்கிழமை காலையில் பால்குடம் ஊர்வலம், அக்கினி சட்டி ஊர்வலமும், அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது, இதில் கோயில் பூசாரி ஜோதி, கோவில் தலைவி பாக்கியலட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
