தொண்டர்களுடன் கடம்பூர் ராஜூ, கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்

முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ இன்று தனது 63- வது பிறந்தநாளை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கேக்’ வெட்டி கொண்டாடினார்.
கோவில்பட்டியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த `கேக்’ வெட்டும் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மாலை மற்றும் சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
அவர்களின் வாழ்த்துகளை பெற்றுக்கொண்ட கடம்பூர் ராஜூ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டினார்.

அப்போது கூடி இருந்தவர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். முன்னதாக சட்டமன்ற அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று புது ரோடு சாலையில் அமைந்துள்ள அண்ணா, எம் ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந் நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாநில எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணை செயலாளர் சீனிச்சாமி, நகர துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
