குமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு வைகாசி திருவிழா இன்று (மே27) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதல், 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, காலை 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அய்யா வழி பக்தர்கள் அய்யா ” சிவ சிவ அரகரா அரகரா ” என்று பக்தி கோஷமிட்டனர். பின்னர் திருக்கொடியை பால. ஜனாதிபதி ஏற்றி வைத்தார். பால லோகாதிபதி, […]
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக .நாராயணன் என்பவர் இருந்தார்.இவர் முன்னதாக திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்த போது தனது கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்தது.இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இறுதி உத்தரவாக தற்போது வகிக்கும் பதவியிலிருந்து இரு நிலைகள் கீழ் இறக்கம் செய்யப்பட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளராக பதவிஇறக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை கலெக்டர் […]
அந்த கடைவீதியில் போலீசார் வந்து குவிந்தார்கள்….துப்பறியும் மோப்ப நாய் விரைந்து வந்தது. கடைவீதியில் இருந்த வட்டிக்கடைமுன் மக்கள் கூட்டம்..அந்தகடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து நூறு பவுன் நகைகளை கொள்ளையடித்திருந்தார்கள். நகைகளை அடகுவைத்தவர்கள் நகை போச்சே என்று அழுதுகொண்டிருந்தார்கள். இன்ஸ்பெக்டர் சலீம் காரில் வந்தார்.அடகு கடையை சுற்றிவந்தார்.எந்த கும்பலின் கைவரிசை இது…கையில் வைத்திருந்த லத்தியை சுழற்றியவாறு சிந்தனையை ஓடவிட்டார். அடகு கடைக்காரரிடம் விசாரணை நடந்தது. நைட்டு பத்து மணிக்கு கடையை பூட்டிவிட்டு போனேன்.. காலையிலே வந்துபார்த்தா […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று உத்தரகோசமங்கை. ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உத்தரகோச மங்கை ஆலயம் உள்ளது.இதுவே உலகில் முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது. ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.ராமாயண காலத்திற்கு முன்பு இருந்தே, இந்தக் கோவில் சிறப்பு பெற்று விளங்கியதாக […]
பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பதாய் ஹோ. இந்த திரைப்படம் தமிழில் ‘வீட்ல விசேஷம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.தமிழ் ரீமேக்கை என்.ஜே.சரவணனுடன் இணைந்து நடிகர், இயக்குனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முக திறமை கொண்ட ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, யோகி பாபு, புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். செல்வா […]
கோவில்பட்டி நகரில் மிக முக்கியமான சாலை புதுரோடு ஆகும். தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கும், சாத்தூர், சிவகாசி வழியாக வரும் வரும் வாகனங்கள் தூத்துக்குடி செல்வதற்கும் இந்த புதுரோடு தான் பிரதான சாலையாகும். இந்த சாலையில் வணிக நிறுவனங்கள், வங்கிகள், ஏ.டி.எம்.மையங்கள் அதிகம் உள்ளன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் மழை பெய்யும்போது தண்ணீர் தேங்கி இருசக்கர வாகன ஓட்டிகளை பயமுறுத்தும். எந்த இடத்தில் பள்ளம் இருக்கிறது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் திணறுவார்கள்பல […]
பாட்டாளி மக்கள் கட்சியின் அடுத்த தலைவர் பொறுப்பை முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் ஏற்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை, திருவேற்காட்டில் வரும் 28ஆம் தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இப்பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகவும், கடந்த 25 ஆண்டுகளாக பா.ம.க. தலைவராக இருந்த ஜி.கே.மணி பா.ம.க. சட்டமன்ற கட்சி தலைவராக தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.10 மாவட்டங்களில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவை அடுத்து அவருக்கு தலைமைப் பதவி அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு […]
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி மன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் இங்குள்ள 8 வார்டுகளில் தி.மு.க. 4 வார்டுகளிலும் அ.தி.மு.க. 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தன.இரு கட்சிகளும் சம அளவில் வெற்றி பெற்றதால் தலைவர் பதவி யாருக்கு? என்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் இந்த தேர்தலில் கலந்து கொள்ளவில்லை.இதனால் 50 சதவீத உறுப்பினர்களுக்கு […]
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தலசயன பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்விய தேசங்களில் 63-வது திவ்வியதேசம் எனப் போற்றப்படும் இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது.கடந்த 2021-ம் ஆண்டு அன்னதானம் சாப்பிட வந்த நரிக்குறவ இன மக்களைச் சாப்பிட விடாமல் கோவில் நிர்வாகத்தினர் வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அந்த கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அன்னதான பாகுபாடு குறித்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நரிக்குறவ பெண்ணுடன் […]
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் பட்டியலை மாவட்ட தலைவர் ஆர்.சித்ராங்கதன் வெளியிட்டுள்ளார்.கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில பொதுசெயலாளர் பொன் பாலகணபதி, மாவட்ட பார்வையாளர் சசிகலா புஷ்பம் ஆகியோரின் ஒப்புதலுடன் நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதாக அவர் கூறி இருக்கிறார்.நிர்வாகிகள் விவரம் வருமாறு:-மாவட்ட துணை தலைவர்கள்- சி.தங்கம், எஸ்,சரஸ்வதி, டி,பல்க் பெருமாள், எஸ்.பி.வாரியார், எஸ்.சிவராமன், எஸ்.செல்வராஜ், டி,சுவைதார், எஸ்,ரேவதி.மாவட்ட பொது செயலாளர்கள்- ஆர்.சிவமுருக ஆதித்தன், டி.ராஜா, […]