திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை அதிக அளவில் வளைகுடா நாட்டு பயணிகளை இலங்கை வழியாக சென்று வருவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. முதலில் வாரத்திற்கு 3 சேவைகளாக இருந்து வந்த நிலையில் பின்னர் தினசரி 2 சேவைகள் இயக்கப்பட்டு வந்தது.அந்த வகையில் காலை 9.30 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து இலங்கைக்கு காலை 10:30 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதேபோன்று மதியம் 2:30 […]
கோவில்பட்டி பகுதியில் கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்களால் பலர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், விருதுநகரை சேர்ந்த ஒரு போலீஸ்காரர் தனது மனைவி பெயரில் கந்து வட்டி கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுத்து கந்துவட்டிக்கு தீர்வு காணக்கோரி காங்கிரஸ் கட்சியை சர்ந்த வக்கீல் அய்யலுசாமி இன்று தற்கொலை போராட்டம் அறிவித்து இருந்தார்.இந்த போராட்டம் இன்று காலை 11 மணிக்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடக்கும் என்றும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட மகேஸ்வரி என்பவர் தற்கொலை செய்வார் என்றும் […]
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள செவ்வாத்தூர் புதூர் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராமரோஜா (வயது 58). இவர்களுக்கு புனிதா என்ற மகளும், ஏழுமலை என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.ஏழுமலை சென்னையில் கார் டிரைவராக உள்ளார். இதனால் எழுமலை மனைவி அம்சா (வயது 31) , தனது 10 மாத குழந்தையுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்வராஜ் இரவு பணிக்கு […]
நகரின் பெரிய மார்க்கெட்… கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரே இரைச்சல்… காய்கறிகள் வேனில் வந்து இறங்கி கொண்டிருந்தன.அந்த மார்க்கெட்டின் வெளியே ஓரத்தில் காரை நிறுத்தினார் சாம்பசிவம். பெரும் பணக்காரர். ஆனால் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். பணக்காரர்கள் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து செல்வார். கையில் மோதிரம் கழுத்தில் தங்க சங்கிலி என்று பளபளப்பாக காட்சி தருவார். மற்ற இடங்களில் எளிமையாக இருப்பார். ஏன் என்றால் யாரும் பணம் கேட்டுவிடக்கூடாது என்ற முன் […]
ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், பாலித்தீன் பைகள் போன்றவை பயன்பாட்டுக்கு தமிழகத்தில் ஏற்கனவே தடை உள்ளது. இருப்பினும் எந்த தடிமன் வரையிலான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம் என்பதில் குழப்பம் இருப்பதால் பல கடைகள், வணிக நிறுவனங்களில் பாலீத்தீன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் ஜூலை 1-ம் தேதி முதல் முழுமையாக தடை […]
கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த பஸ் நிலையம் பயணிகளின் வசதி பற்றி கண்டுகொள்ளாமல் வியாபார கடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகராட்சி வருமானத்துக்கு வழிவகுத்து உருவாக்கப்பட்டது போல் காட்சி அளிக்கிறது.வணிக வளாகம் போல் நிறைய கடைகள், அலுவலகங்கள், கிளினிக்குகள் பஸ் நிலைய வளாகத்தில் உள்ளன. இது தவிர தற்காலிக கடைகள் பெருகி காணப்பட்டன.இதன் காரணமாக பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் நிறுத்துவதற்கு கூட இடம் கிடைக்காது. இதனால் பஸ் நிலையத்துக்கு வெளியே பஸ்களை […]
இலங்கை தலைநகர் கொழும்புவில் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது கோயம்புத்தூரில் வசித்து வருபவர் டாக்டர் ராமசுப்பு . இவர் கடந்த 18.6.2022 மற்றும் 19.6.2022 ஆகிய நாட்களில் திருச்செந்தூர் கோவிலுக்கு குடும்பத்துடன் வழிபாடு செய்வதற்காக வந்து ஒரு தனியார் விடுதியில் தங்கினார். 18.6.2022 அன்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளில் டாக்டர் ராமசுப்புவின் 1 வயது பேரனுக்கு திடீர் வயிற்றுவலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டான்.இதனால் ராமசுப்பு மருந்து வாங்குவதற்காக விடுதியிலிருந்து வெளியே […]
இன்று ஜூலை 1-ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்பணி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவர்கள் சங்க கோவில்பட்டி கிளை தலைவர் டாக்டர் சுப்புலட்சுமி, மந்திதோப்பு ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மந்திதோப்பு ஊராட்சி செயலர் பாலகுமார் அனைவரையும் வரவேற்றார்.மரக்கன்றுகள் நடும் பணியை ரோட்டரி […]
அட்ட வீரட்டத் ஸ்தலங்கள் திருக்கண்டியூர் —- பிரமன் சிரம் கொய்தது திருக்கோவலூர்__ அந்தகாசுரனைச் சங்கரித்தது திருஅதிகை __ திரிபுரத்தை எரித்தது திருப்பறியலூர் __ தக்கன் சிரங்கொய்தது திருவிற்குடி —- சலந்தராசுரனைச் சங்கரிதத்து வழுவூர் (வைப்புத்தலம்) — யானையை உரித்தது திருக்குறுக்கை — காமனை எரித்தது திருக்கடவூர் —- எமனை உதைத்தது. பன்னிரு ஜோதிலிங்கத் ஸ்தலங்கள் கேதாரம் (இமயம்) —- கேதாரேஸ்வர்ர் சோமநாதம் (குஜராத்) —- சோமநாதேஸ்வரர் மகாகாளேசம் (உஜ்ஜயினி) —- மகாகாளேஸ்வரர் விசுவநாதமே (காசி) —- விஸ்வநாதேசுவரர் […]
10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம்; அமைச்சர் மா.சுப்பிரமனியன் பேட்டி
தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் திடீரென தொற்றின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. நேற்று ஒருநாள் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது.இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அந்தத் துறையின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடன் கூறியதாவது;-கடந்த 2 வாரங்களில் கொரோனா பரிசோதனையானது 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பானது இணை […]