• June 9, 2025
செய்திகள்

5 சதவீத ஆதரவு கூட இல்லாமல் வானத்திற்கும், பூமிக்கும் குதிக்கும் ஓ.பன்னீர்செல்வம்- டி.ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி….அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டது என்று நீங்கள் தெரிவிக்கும் நிலையில் நான்தான் இன்றைக்கும் கழக ஒருங்கிணைப்பாளர் என்று ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துவருகிறாரே? பதில்:- இப்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. திட்டமிட்டப்படி பொதுக்குழு நடைபெறும். இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்தினாலே நான் எதுவும் […]

செய்திகள்

சர்க்கரை நோயினால் பாதிப்பு: நெல்லையப்பர் கோவில் யானைக்கு தோல் செருப்பு

திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் உள்ளது. தற்போது கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் கோவில் யானை சர்க்கரை நோயினால் பாதிகப்பட்டுள்ளது. டாக்டர்கள் நேரில் வந்து யானையை பரிசோதித்து பார்த்தனர். உடலில் சரக்க்கரை அளவு கூடி இருப்பதால் கால் வலியினால் யானை அவதிப்பட்டு வருகிறது.நீண்ட நேரம் நிற்கமுடியாமலும், நடப்பதற்கும் கஷ்டப்படுகிறது. இதனால் டாக்டர்கள் யானையின் கால்களுக்கு தோல் செருப்பு அணிவிக்கும்படி அறிவுரை கூறினார்கள்.இதன் படி கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் யானைக்கு ரூ. […]

செய்திகள்

தமிழ் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு

முதுகுளத்தூர்.காம் சார்பில் துபாய் மாநகராட்சியின் ஊடகப்பிரிவு மேலாளர் இஸ்மாயில் மேலடி ஆங்கிலத்தில் எழுதிய நூல், ’புலம்பெயர் மணற்துகள்கள்’ என்ற பெயரில் தமிழில் திருப்பூரை சேர்ந்த எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.இந்த நூல் வெளியீட்டு விழா சார்ஜா பேலஸ் உணவகத்தில் நடைபெற்றது. முஹிப்புல் உலமா கீழக்கரை ஏ.முஹம்மது மஹ்ரூப் தலைமை தாங்கினார். ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்று பேசினார். கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ஆ. முகம்மது முகைதீன் மூலநூல் ஆசிரியர் இஸ்மாயில் மேலடி குறித்த […]

கோவில்பட்டி

கேரளாவுக்கு கடத்திய 2 டன் ரேஷன் அரிசி சிக்கியது; கோவில்பட்டியில் சரக்கு ஆட்டோவுடன்

கோவில்பட்டி பல்லாக்கு ரோடு பகுதியில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் தலைமையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 40 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆட்டோவில் இருந்த டிரைவரான கோவில்பட்டி பல்லாக்கு சாலையை சேர்ந்த மாதவன் மகன் தாமசை (வயது 26) பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில், ரேஷன் அரிசி மூட்டைகளை மதுரை வழியாக கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. […]

தூத்துக்குடி

இரும்புக்கடை ஊழியர் வந்த காரை வழிமறித்து தகராறு: ரூ.10 லட்சத்துடன் தப்பிய 2

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரை சேர்ந்தவர் சோமசுந்தரம் மகன் செந்தில்குமார் (40). இவர் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் ஒரு இரும்புக் கடையில் வேலை பார்த்து வருகிறார். உடன்குடி தேரியூரில் உள்ள இரும்புக்கடையில் வசூல் பணம் ரூ. 10 லட்சத்தை வாங்கி கொண்டு செந்தில்குமார் காரில் நேற்று மாலை தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.உடன்குடி-குலசேகரன்பட்டினம் சாலை இசக்கியம்மன் கோவில் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2பேர் காரை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்தனர். சிறிது நேரத்தில் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நெய்தல் கலைவிழா 7-ந்தேதி தொடக்கம்; ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தின் தனித்துவத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், ஸ்பிக் நிறுவனமும் இணைந்து ‘நெய்தல்- தூத்துக்குடி கலை விழா’ என்ற விழாவை நடத்துகிறது.இந்த விழா வருகிற 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 4 நாட்கள் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கலை விழா நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 300 கிராமிய கலைஞர்கள் கலந்து […]

ஆன்மிகம்

ஜடாயுவை போல் சிற்பிக்கும் முக்தி அளித்த விஜயராகவ பெருமாள்

காஞ்சீபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் திருப்புட்குழி என்ற திவ்யதேசம் அமைந்துள்ளது. அவ்விடத்தில் தான் ராமபிரான் ஜடாயுவுக்கு முக்தியளித்தார்.அங்கு மரகதவல்லி தாயாருடன் கோயில் கொண்டிருக்கும் விஜயராகவ பெருமாள் அக்கோவிலில் ஜடாயுவுக்கு ஒரு தனிச் சன்னதி வழங்கியுள்ளார்.கோவிலில் நடைபெறும் உற்சவங்களில் ஜடாயுவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது சன்னதியின் முன் நின்றுதான் அத்யாபகர்கள் திவ்யப் பிரபந்த பாராயணத்தைத் தொடங்குவார்கள்.இவ்வாறு ஜடாயுவுக்கு முக்தியளித்தது மட்டுமின்றி உற்சவங்களின் போதும் அவருக்குச் சிறப்பு மரியாதை செய்யுமாறு எம்பெருமான் அருள்புரிந்திருக்கிறார்.இந்தத் தல வரலாற்றைத் திருப்புட்குழியில் வாழ்ந்த […]

சிறுகதை

கடலோரத்தில் கன்னி உடல்…(சிறுகதை)

சென்னை திருவான்மியூர் கடற்கரை ஓரம்…அலைகளின் கரங்கள்.. அங்கே நின்றவர்களின் கால்களை தொட்டு சென்றன.வாக்கிங் சென்ற சிலரும்..வாக்கிங்கை நிறுத்திவிட்டு அலைகளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.அலைகள் நழுவி உள்ளே சென்றபோது…அந்த மஞ்சள் நிற சேலை…கடற்கரை மணலில் பரவிகிடந்தது. அருகில் சாய்ந்து கிடந்த நிலையில் கன்னிப்பெண் உடல்…முகம் சரியாக தெரியவில்லை.கார்மேக கூந்தல் முகத்தை பாதி மறைத்திருந்தது…வாக்கிங் வந்த முதியவர்..யார் அந்த பொண்ணு…என்னாச்சு..கடலில் குதிச்சிட்டா…இல்லை தவறி விழுந்துட்டா.. என்று அங்கு நின்றவர்களிடம் கேட்டார்.அதற்கு ஒரு பெண்..யாருக்கு தெரியும் பெரியவரே ….ஏதாவது காதல் பிரச்சினையோ..குடும்ப பிரச்சினையோ யாருக்கு […]

செய்திகள்

கொடைக்கானல் செல்பவர்களுக்கு முக கவசம் கட்டாயம்…

சுற்றுலா நகரமான கொடைக்கானல் சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வது வழக்கம். தற்போது சீசன் நன்றாக இருக்கிறது.பள்ளிக்கூடங்கள் திறப்பு காரணமாக இதனால் சுற்றுலா பயனிகள் கூட்டம் ஓரளவு காணப்படுகிறது, சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கொடைக்கானலில் கூட்டம் நிரம்பி வழிகிறதுதற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் முக கவசம் கட்டடாயம் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்து இருக்கிறது. எனினும் மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ள மாவட்டங்களில் மட்டும் மக்கள் முக கவசம […]

கோவில்பட்டி

சுபாநகர் கோவிலில் ரூ.2 லட்சம் ஐம்பொன் சாமி சிலை திருட்டு

கோவில்பட்டி சுபா நகரில் ஸ்ரீ நித்யகல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜைக்கு பிறகு கோவில் நடை சாத்தப்பட்டது. இதை தொடர்ந்து அர்ச்சகர் வரதராஜ அய்யங்கார் வீட்டுக்கு கிளம்பி சென்றார்.இன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த அர்ச்சகர் , கோவில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பதறி அடித்துக்கொண்டு உள்ளே போய் பார்த்தார். சுவாமி சன்னதியில் இருந்த ஐம்பொன் சாமி சிலை திருட்டு போய் இருந்ததை கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி […]