5 சதவீத ஆதரவு கூட இல்லாமல் வானத்திற்கும், பூமிக்கும் குதிக்கும் ஓ.பன்னீர்செல்வம்- டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி….அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டது என்று நீங்கள் தெரிவிக்கும் நிலையில் நான்தான் இன்றைக்கும் கழக ஒருங்கிணைப்பாளர் என்று ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துவருகிறாரே?
பதில்:- இப்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. திட்டமிட்டப்படி பொதுக்குழு நடைபெறும். இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்தினாலே நான் எதுவும் சொல்ல முடியாது. நிச்சயமாக நியாயம், தர்மம் எங்கள் பக்கம் உள்ளது. கண்டிப்பாக அந்த வகையில் நீதிமன்றத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
பதில்:- எடப்பாடியார் முதல்வராக இருந்த காலத்தில் முறையாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தினார். ஆனால் அவர்களை ஜாமீன் எடுக்க யார் வந்தார்கள். இதனை எல்லாம் தமிழக மக்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். கேரளா, கர்நாடகத்தில் அவர்கள் கெடும் குற்றம் செய்தவர்கள். இவர்களுக்கு யார் ஜாமீன் அளித்தது. தி.மு.க.தானே ஜாமீன் அளித்தனர். எங்களைப் பொறுத்தவரையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். இதில் மாறுபட்ட கருத்து இல்லை.,இந்த பணியைத்தான் எடப்பாடியார் முன்னர் செய்தார்.
கேள்வி:-கொடநாடு சம்பவம் நடைபெற்ற பின்னர் நீங்கள் யாரும் நேரில் சென்று பார்க்கவில்லை என்று குறிப்பிடுகிறார்.
பதில்;- அம்மா தனிப்பட்ட முறையில் தங்கும் இடம் கொடநாடு. அங்கு நாங்கள் செல்லவேண்டிய அவசியம் என்ன உள்ளது. இந்த கேள்வியே தவறு, இரண்டாவது ஒரு குற்றம் நடத்த இடத்திற்கு எப்படி முதலமைச்சர் செல்ல முடியும். குற்றம் நடைபெற்றால் அந்த குற்றத்தில் யார் எல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதை எல்லாம் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதான் முதலமைச்சரின் கடமை. இதைத்தான் எடப்பாடியார் அன்று சட்டப்படி செய்தார். ஆனால் தி.மு.க.தானே ஜாமீனில் எடுத்தது.
கேள்வி:-ஒற்றை தலைமை எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள நிலையில் இந்த கொடநாடு விவகாரம் கிளப்படுகிறதா.
பதில்:- அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. இன்றைக்குப் பொய் வழக்கு போட்டுவருகிறது. ஆட்சிக்கு வந்து உருப்படியாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் நடவடிக்கை ஏதாவது எடுத்துள்ளதா. எதிர்க்கட்சிகளை பழிவாங்கவேண்டும்.குறிப்பாக அ.தி.மு.க.வைப் பழிவாங்கவேண்டும் என்று செயல்படுகிறார்கள். அ.தி.மு.க.வின் நற்பெயருக்கு எப்படியாவது களங்கம் கற்பிக்கவேண்டும் என்று செயல்பட்டுவருகிறார்கள். கட்சியை அழித்துவிடலாம் என்றால் அதுமட்டும் நடக்கவே நடக்காது. அவர் அப்பா காலத்திலே எவ்வளவே வழக்குகள் போட்டார்கள். வழக்குகள் போட்டு அ.தி.மு.க.வை அழிக்கவேண்டும் என்று நினைத்தால் அதனைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை.முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது.போலத்தான். எந்த வழக்கு போட்டாலும் சரி, அதனை எதிர்கொள்வதற்கும் சரி,.சந்திப்பிற்கும் சரி அ.தி.மு.க. திராணியோடு உள்ளது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.திமுக ஆட்சியில் நடந்த கொலைகளை நாங்கள் தூசு தட்டி விசாரிப்போம்.
கேள்வி:-அம்மாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. கம்பெனியாக மாறிவிட்டது என்று சசிகலா குறிப்பிட்டுள்ளாரே
பதில்:- அவரை என்ன செய்வது. ஓநாயுக்கு ஓநாய் புத்திதான் வரும். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவுமாம். எங்களை பொறுத்தவரையில் அவர்கள் எல்லாம் விலக்கப்பட்ட சக்திகள். தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகள். தமிழ்நாடு மக்களால் ஒதுக்கப்பட்ட கட்சிகள் ஆள் ஆளுக்கு ஒரு வேன் எடுத்துக்கொண்டார்கள். ஆள் ஆளுக்கு டூர் போகிறார்கள். வேஸ்ட் அப் டைம். வேஸ்ட் ஆப் மணி, வேஸ்ட் ஆப் எனர்ஜி. வேஸ்ட் ஆப் பியூல்.இன்றைக்கு டீசல் விற்கும் நிலையில் இது எல்லாம் தேவையா. இதனால் ஒரு தாக்கமும் ஏற்படப்போவதில்லை. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் இரண்டு நிலைகள். ஒன்று ஒற்றை தலைமை,.இரண்டாவது சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரை எந்த நிலையிலும் அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளாது என்கின்ற அந்த நிலைதான்.
கேள்வி.:- தற்போது உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை ஒதுக்கிவைக்கும் பணி நடைபெறுகிறதா?
பதில்:- நாங்கள் யாரையும் ஒதுக்கி வைக்கவில்லை. பொதுக்குழு என்பது சக்திமிக்க அமைப்பு. மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்பதுபோல தொண்டர்களின் தீர்ப்பு இறுதியானது. அதுபோல பொதுக்குழு உறுப்பினர்களின் தீர்ப்பு இறுதியானது. இதுதான் விதிமுறை. பொதுக்குழுவிற்கு வாருங்கள். உங்கள் பலம் என்ன.எடப்பாடியார் பலம் என்ன என்பதை காண்பியுங்கள். பொதுக்குழு யாரை ஏற்றுகொள்கிறதோ அவரே ஏற்கட்டும். இதுதானே முறை.
5 சதவீத ஆதரவு கூட இல்லாமல் இப்படி வானத்திற்கும்,,பூமிக்கும் குதித்தால் எள்ளி நகையாகக்கூடிய விஷயம்தான். 95 சதவீத தொண்டர்களின் எண்ணம் எடப்பாடியார் ஒற்றை தலைமை ஏற்கவேண்டும் என்பதுதான். அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்தோம், முதல்வராக இருந்தோம் நம்மால் அ.தி.மு.க.வில் சிறு துளி அளவுக்குக்கூடப் பிரச்சினை வரக்கூடாது என்று நினைக்கவேண்டும். ஊர் ஒன்றுபட்டுள்ளது. நாமும் ஒன்றுகூடுவோம் என்ற எண்ணம் இருந்தால் உண்மையில் தொண்டர்கள் பாராட்டுவார்கள்.
இதனைவிட்டுவிட்டு உட்கட்சி விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வது, கட்சியினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது, கட்சியை முடக்க நினைப்பது, இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைப்பது அந்த தீய எண்ணத்தோடு, தி.மு.க.வின் பி டீமாக இருந்தால் கண்டிப்பாக தொண்டன் வரலாற்றில் மன்னிக்கமாட்டான்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.
