• June 13, 2025
செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி முறையீடு: ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தனி

கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற இருந்த அ.தி.மு.க. பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்குகள் தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதையடுத்து அ.தி.மு.க. பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோட்டில் […]

ஆன்மிகம்

ஆகஸ்டு 5 – வீடுகளில் வரலட்சுமி விரத பூஜை

ஆகஸ்டு 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. திருமகளான லட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் வரலட்சுமி பண்டிகை கொண்டாடுகிறோம். ஆவணி மாதம் பவுர்ணமி நாளுக்கு முந்தையதாக வரும் வெள்ளிக்கிழமையில் தான் இவ்விரத பூஜை அனுசரிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் என்றால் முதல் நாளான வியாழனன்றே அம்மனை அழைக்கிறோம்.வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். வரலட்சுமி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கான `மாற்றத்தை தேடி’ விழிப்புணர்வு முகாம்

கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான `மாற்றத்தை தேடி’ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி காவல்துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-பள்ளியில் பயிலும் அனைவரும் குழந்தைகளே,கல்வி கற்க வேண்டிய வயதில் கல்வியையும்,ஒழுக்கத்தையும் மட்டுமே கற்றுக் கொண்டு சாதனையாளர்களாக உருவாக வேண்டும்.செல்போனில் தங்களது சுய விவரங்களை பதிவேற்றக்கூடாது, செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்இவ்வாறு பேசினார். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ஜெயலதா அனைவரையும் […]

கோவில்பட்டி

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி கையெழுத்து இயக்கம்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி உலக திருக்குறள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது வருகிறது. இந்த நிலையில் இன்று உலக திருக்குறள் கூட்டமைப்பின் கோவில்பட்டி குறள் மாவட்டம் சார்பில் கையழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.காலை நேரத்தில் கோவில்பட்டி ராமசாமிதாஸ் பூங்காவுக்குள் நடைபயணம் மேற்கொண்டவர்களை சந்தித்து கையெழுத்து பெறப்பட்டது. மத்திய அரசை வலியுறுத்தி இந்த கோரிக்கையை ஆதரித்து நிறைய பேர் கையெழுத்து போட்டனர்,இன்னும் பல்வேறு பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இறுதியில் இந்த கையெழுத்து பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பி […]

கோவில்பட்டி

உலக தாய்ப்பால் வார விழா:கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் இன்னர் வீல் கிளப் கோவில்பட்டி இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடத்தின. 80 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டதுஇந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கமல வாசன் தலைமை தாங்கினார். குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் துரை பத்மநாதன், டாக்டர் சுதா மற்றும் சங்க பட்டய தலைவி ஜெயஸ்ரீ ஆகியோர் சிறப்புரை […]

செய்திகள்

குற்றாலம் வந்த சுற்றுலா வேன் விபத்தில் 2 பேர் பலி

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 18 பேர் வேன் மூலம் குற்றாலத்திற்கு சுற்றுலா வந்தனர். மதுரை ஐகோர்ட்டு கிளை அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதியது.இதில் வேனின் முன்பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சிக்கி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் […]

பொது தகவல்கள்

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்..

நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15 முதல் 30 நிமிடம் வரை ஊற வைத்து பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும். காலையிலேயே (6.30 மணிக்குள்) குளித்து முடித்துவிட வேண்டும்.வாரமிருமுறை அதாவது, ஆண்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் குளிப்பது சிறப்பு என்று சித்த மருத்துவம் கூறுகிறது.தூசு மற்றும் அதிக உஷ்ணம் போன்றவை நமது உடலை பாதிக்காமல் இருப்பதற்கு நாம் வாரத்திற்கு ஒருமுறையாவது தலை மற்றும் உடலுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.எண்ணெய் […]

செய்திகள்

காவிரி ஆற்றில் வெள்ளம்: பவானியில் வீடுகளை சூழ்ந்த தண்ணீர்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணை நிறைந்து உபரி நீர் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணை ஏற்கெனவே அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் உபரிநீரானது […]

செய்திகள்

“தண்டோரா”தேவை இல்லை; தலைமை செயலாளர் உத்தரவு

தமிழக, மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு தனது கைப்பட ஒரு கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறார். அதில் கூறி இருப்பதாவது:-அன்புள்ள மாவட்ட ஆட்சியர்களே! வணக்கம், மாவட்ட மக்களிடத்தில் முக்கிய செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும், அதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன். அறிவியல் வளர்ந்துவிட்டது. தொழில் நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் “தண்டோரா” போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் […]

செய்திகள்

சீமானுக்கு வாய்க்கொழுப்பு; டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளது என்றும்,குறைந்த அளவு பால் தரப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே பதில்:- விஞ்ஞான பூர்வ ஊழல் செய்து சர்காரியா கமிஷனால் குற்றவாளி என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள். அறிவியல் பூர்வமாக ஊழல் செய்வது என்பது இவர்களுக்குக் கைவந்த கலை. தமிழகம் முழுவதும் 37 லட்சம் லிட்டர் பால் விற்பனை ஆகிறது. […]