• April 19, 2024

“தண்டோரா”தேவை இல்லை; தலைமை செயலாளர் உத்தரவு

 “தண்டோரா”தேவை இல்லை;  தலைமை செயலாளர் உத்தரவு

தமிழக, மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு தனது கைப்பட ஒரு கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறார். அதில் கூறி இருப்பதாவது:-
அன்புள்ள மாவட்ட ஆட்சியர்களே! வணக்கம், மாவட்ட மக்களிடத்தில் முக்கிய செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும், அதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன்.

அறிவியல் வளர்ந்துவிட்டது. தொழில் நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் “தண்டோரா” போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை.

ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் வரச் செய்வதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களை கொண்டு சேர்த்திட இயலும்.

எனவே, தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.

இச்செய்தி, ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
இவ்வாறு கடிதத்தில் இறையன்பு கூறி இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *