• June 14, 2025
கோவில்பட்டி

பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்-பரிசு

கோவில்பட்டி வட்டார நூலகத்தில் 75 வது சுதத்திர தின பவள விழா நடைபெற்றது. வாசகர் வட்டத் தலைவர் ரவீந்தர் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.நூலகப் புரவலர் முத்துப்பாண்டியன், தலைமை ஆசிரியர் பணி ஓய்வு உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார நூலகர் அழகர்சாமி அனைவரையும் வரவேற்றார்.சுதந்திர தினஅமுதப் பெருவிழாவை முன்னிட்டு 14.8.22 அன்று பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கட்டுரை, ஒவியம், வண்ணம் தீட்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்குசிறப்பு விருந்தினர் சுவீடன் நாட்டு வானொலி […]

கோவில்பட்டி

சுதந்திரதின விழாவில், தலைவர்கள் வேடமணிந்த மாணவர்கள்

கோவில்பட்டி மில் தெருவில் உள்ள நகராட்சி ஆரம்பப்பள்ளியில் வைத்து 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது, இது கோவில்பட்டி ரோட்டரி கிளப்பின் தத்தெடுத்த பள்ளியாகும். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை தலைமையாசிரியை ராஜசரஸ்வதி வரவேற்று பேசினார், ரோட்டரி கிளப் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி நிகழச்சியில் விநாயகா ரமேஷ் , நாராயணசாமி, பரமேஸ்வரன், சீனிவாசன் , பூல் பாண்டியன், கிருஷ்ணமூர்த்தி, என்ஜினியர் நாராயணசாமி, ரமேஷ் குமார், மாரியப்பன் சுரேஷ் மாரிச்சாமி ,முத்து […]

கோவில்பட்டி

காமநாயக்கன்பட்டி விண்ணேற்பு பெருவிழா திருத்தேர் பவனி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வீரமாமுனிவர் பங்கு தந்தையாக பணியாற்றிய சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்தின் விண்ணேற்பு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி விழா நடத்தப்பட்டது.கொரோனா தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, இந்த ஆண்டு ஆலயத்தில் விண்ணேற்பு […]

கோவில்பட்டி

ஊராட்சி அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி தலைவர்கள் மரியாதை

தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சிமன்ற தலைவர்கள் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றினார்கள். கோவில்பட்டி வில்லிசேரி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உள்ள கொடிகம்பத்தில் தேசிய கொடியை ஊராட்சி மன்ற தலைவர் ப.வேலன் ஏற்றி மரியாதை செலுத்தினார்.இந்த விழாவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் காசிராஜன், உறுப்பினர்கள், கோவில்பட்டி தொகுதி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவர்க்கும் இனிப்பு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஓவிய பயிற்சி பட்டறை; மாணவ, மாணவிகள் ஆர்வம்

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் கொண்டைய ராஜு ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் சார்பில் 75 வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு ஓவிய பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. கோவில்பட்டி சவுபாக்கியா மஹாலில் நடந்த இந்த பயிற்சி பட்டறையில் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து பள்ளி மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஓவிய பயிற்சி பெற்று ஓவியங்களை வரைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார்.ரோட்டரி மாவட்ட […]

சிறுகதை

துப்பாக்கி முனையில்…சிறுகதை

பனி பிரதேசம்…கடுங்குளிர்…சாலையில் வளைந்து வளைந்து சென்றது அந்த பஸ். பல்வேறு மாநிலத்தவரும் பஸ்சில் வந்தனர். பெண்கள்,முதியவர்கள், குழந்தைகள் என்று இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பஸ்சில் வந்தார்கள்.எல்லோரும் மலை பகுதியில் உள்ள அழகிய பூங்காவை கண்டு களிக்க சென்றனர்.குளிர்காற்று வீசியது.பனிக்குல்லாய் மாட்டியபடி பயணிகள் இருந்தனர்.தமிழ் நாட்டிலிருந்து சுற்றுலா சென்ற நான்கு வாலிபர்கள் அந்த பஸ்சில் கடைசி சீட்டில் அமர்ந்தபடி ஜாலியாக பேசிகொண்டு இருந்தனர்,டிரைவர் பஸ்சை லாவகமாக ஓட்டிச்சென்றார். கண்டக்டர் அருகில் இருந்தார். மதியம் ஒரு மணி…பஸ்…வழியில் முக்கிய இடத்தில் நின்றது. […]

செய்திகள்

அ.தி.மு.க.வின் முதல் எம்.பி. மாயத்தேவர் மரணம்

எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை தொடங்கியபிறகு 1973-ஆம் ஆண்டில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் அ.தி.மு.க.முதன் முதலாக களம் கண்டது, இந்த தொகுதி வேட்பாளராக மாயத்தேவர் போட்டியிட்டார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வக்கீலான இவர் தான் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையை தேர்வு செய்தவர்.தேர்தல் வெற்றி மூலம் அ.தி.மு.க.வின் முதல் எம்,.பி. என்ற பெருமையை மாயத்தேவர் பெற்றார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.உச்சப்பட்டி கிராமத்தில் பிறந்த மாயத்தேவர் பள்ளி கல்வியை பாளையங்கோட்டை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி விமான ஓடுதளத்தை விமானப் பயிற்சி நிறுவனமாக மாற்றும் திட்டம்; அமைச்சர் தங்கம்

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது அவரிடம் தமிழகத்தில் பல விமான ஓடுதளங்கள் காலியாக உள்ளன. இதுபோன்ற எத்தனை விமான ஓடுபாதைகள் நம்மிடம் உள்ளன, அவற்றை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது எனகேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தங்கம் தென்னரசு பதில் அளித்து கூறி இருப்பதாவது:-தமிழ்நாட்டில் மொத்தம் 17 விமான ஓடுதளங்கள் உள்ளன. இதில் கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, சோழவரம், கானாடுகாத்தான், நெய்வேலி, கோவில்பட்டி ஆகியவை பயன்படுத்தப்படாத விமான ஓடுதளங்களாகும். […]

கோவில்பட்டி

தபால்துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து நாளை வேலைநிறுத்த போராட்டம்; சி.ஐ.டி.யு.ஆதரவு

தபால்துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து நாளை 1௦-ந்தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது,இதற்கு சி.ஐ.டி.யு. ஆதரவு தெரிவித்து இருக்கிறது,இது தொடர்பாக சி.ஐ.டி.யு.தொழிற்சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன், பொதுசெயலாளர் சுகுமாறன் ஆகியோர் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-அரசின் சேவை துறைகளில் ஒன்றான தபால்துறை நாட்டின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனையில் உள்ள குக்கிராமங்களுக்கும் மிக குறைந்த கட்டணத்தில் தபால் சேவை, பண பரிமாற்றம், சிறு சேமிப்பு என பல்வகை பணிகளை செய்து வருகிறது. இந்த துறையையும் […]

கோவில்பட்டி

அ.தி.மு.க. தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி; கடம்பூர் ராஜூ பேட்டி

அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-கேள்வி:- தமிழக கவர்னரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தது பற்றி கூறுகையில் அரசியல் பற்றி பேசினோம் என்று கூறி இருக்கிறாரபதில்:- கவர்னரை மரியாதை நிமித்தம் சந்தித்ததாக கூறிய ரஜினிகாந்த் அரசியல் பற்றியும் பேசியதாகவும் கூறி இருக்கிறார், அரசியலுக்கு அப்பாற்பட்டவர் கவர்னர். அவரிடம் ரஜினிகாந்த் என்ன அரசியல் பேசினார் என்று தெரியவில்லை. அவரிடம் தான் கேட்க […]