கோவில்பட்டியில் ஓவிய பயிற்சி பட்டறை; மாணவ, மாணவிகள் ஆர்வம்
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் கொண்டைய ராஜு ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் சார்பில் 75 வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு ஓவிய பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. கோவில்பட்டி சவுபாக்கியா மஹாலில் நடந்த இந்த பயிற்சி பட்டறையில் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து பள்ளி மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஓவிய பயிற்சி பெற்று ஓவியங்களை வரைந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார்.
ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் நாராயணசாமி, பப்ளிக் இமேஜ் மாவட்ட தலைவர் முத்து செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி ரோட்டரி சங்க செயலாளர் மணிகண்ட மூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஓவிய பயிற்சி பட்டறையை தொடக்கி வைத்து கலந்து கொண்ட மாணவர்களுக்கு பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கி பேசினார்.
கொண்டையராஜு ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் நிர்வாகி முருக பூபதி, மற்றும் ஆசிரியர்கள் முத்து கோமதி, சாருமதி,கார்த்திகா, தங்கலட்சுமி உள்ளிட்டோர் மாணவ மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் விக்னேஸ்வரன், வீராச்சாமி, கிருஷ்ணசாமி, முத்து முருகன், யோகா குணா, ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஓவிய பயிற்சி பள்ளி ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.