தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்து பெரும்பாலான நாட்கள் விலை ஏற்றத்திலேயே காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. மார்ச் 28-ந் தேதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று பவுனுக்கு அதிரடியாக ரூ.400 அதிகரித்து இருக்கிறது. அதன்படி, கோவில்பட்டியில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் […]
மீன்பிடி தடைக்காலம் என்பது கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில நாட்கள் அல்லது சில மாதங்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க அரசு விதித்துள்ள தடைக்காலத்தை குறிப்பதாகும். கோடை காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகம் நடைபெறும். இக்காலங்களில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும். விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது படகுகள் மற்றும் வலைகளில் அடிப்பட்டு மீன் குஞ்சுகள் அழியும் நிலை ஏற்படும். எனவே இக்காலங்களில் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி உட்பட […]
சென்னை-தூத்துக்குடி இடையே வந்தே பாரத் ரெயில்: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
சென்னை- தூத்துக்குடி இடையே பயணிகள் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் சென்னைக்கும், தூத்துக்குடிக்கும் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தூத்துக்குடி எம்,.பி.யுமான கனிமொழி வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தில் கனிமொழி பேசியதாவது;- ,சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தினை எதிர்கொள்ள, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக பழைய ஜனதா எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் புதிய […]
கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட மதிமுக சார்பில் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம் பி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி ராஜீவ் நகர் நீடிய வாழ்வு ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி,மதிய உணவு வழங்கினர். தொடர்ந்து அங்குள்ள 90 முதியோர்களுக்கு ஆடைகள், பெட்ஷீட் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ்,மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். […]
வாரந்தோறும் புதன்கிழமைகளில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீரக்கும் மனு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனபடி இன்று தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் […]
தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்து பெரும்பாலான நாட்கள் விலை ஏற்றத்திலேயே காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் 25-ந் தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், 26-ந் தேதியில் இருந்து உயரத் தொடங்கி 28-ந் தேதியில் முதல் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டிய வண்ணம் இருக்கிறது. அந்த வரிசையில் நேற்றும் விலை அதிகரித்து, இதுவரையில் இல்லாத வரலாறு […]
தமிழ்நாடு சட்டப் பேரவையில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இலங்கையில் அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது. தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள்தான் என்பதை மத்திய அரசு அடிக்கடி மறந்துவிடுகிறது. எல்லைதாண்டி வந்தார்கள் என்று சொல்லி அவர்களுக்கு அதிகபட்ச சிறை தண்டனை விதிக்கப்படுகிறது அல்லது அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுகிறது. அண்டை […]
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் 100 டிகிரி பாரன்கீட்டை தாண்டியது. இந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:- தமிழகத்தில் நாளை 3ந் தேதி 5 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்கோவில் பங்குனி பெருந்திருவிழா 5 -ம் தேதி தொடக்கம்; நிகழ்ச்சிகள்
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் பங்குனி பெருந்திருவிழா நாட்கால் விழா நடந்திருக்கும் நிலையில் 4 -ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் அங்குரார்ப்பணம் நடக்கிறது. அதை தொடர்ந்து 5.4.2025 சனிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் மேஷ லக்கனத்தில் கொடியேற்றம் நடக்கிறது,மாலை 4 மணிக்கு திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரப்பணி விடை ஸ்ரீ பலிநாதர் அஸ்திரதேவர் திருவீதி உலா நடைபெறும். அன்றைய மண்டகப்படிதாரர் : திருக்கோயில். […]
இன்றைய கால கட்டத்தில மிகப்பெரிய அச்சுறுத்தலாக மனித சமுதாய த்திற்கு பல்வகையான கொடிய நோய்கள் ( கேன்சர் குழந்தையின்மை ) உண்டாகின்றன இந்த பிரச்சனைகளின் ஆணி வேராக நாம் உண்ணும் உணவு உற்பத்தி முறையில் ரசாயன உரங்களும் பூச்சிக் கொல்லிகள் அளவுக்கதிகமாக கலப்பதால் தான். .மனிதன் விளைச்சலை பெருக்கிட கண்ட கண்ட உரங்களை பயன்படுத்திடுவதால் தான் விளைச்சலில் முன்னுக்கு வந்தநாம் நாற்பது வயதிலேயே மருந்து மாத்திரைகளை அள்ளி போடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். ஆட்டு எரு ( […]