தேமுதிக இளைஞரணியை வலுப்படுத்த கோவில்பட்டி கூட்டத்தில் ஆலோசனை

தேசியமுற்போக்கு திராவிட கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக கோவில்பட்டியில் மாவட்டச்செயலாளர் சுரேஷ் தலைமையில், மாநில கேப்டன் மன்ற துணைசெயலாளர், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் வைரம் , கோவில்பட்டி தொகுதி செயலாளர் காளிதாஸ் முன்னிலையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அமைத்த பூத்கமிட்டியை ஆய்வு செய்து தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டது.

கழக பொதுச்செயலாளர் பிரேமலதா கை காட்டும் வேட்பாளரை வெற்றிபெற செய்யவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது,

மேலும் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் இளைஞரணியை வலுப்படுத்த ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன்,மலைராஜ், கோவில்பட்டி நகரச்செயலாளர் நேதாஜி பாலமுருகன்,கயத்தார் கிழக்கு ஒன்றியசெயலாளர் அருண்,கயத்தார் பேரூர் செயலாளர் கண்ணண், கழுகுமலை பேரூர் செயலாளர் செல்லப்பாண்டி,மாவட்ட கேப்பன் மன்ற செயலாளர் முத்துமாலை, துணைசெயலாளர்கள் குவாலிஷ் ராஜ், அந்தோணி,மாவட்ட மகளிரணி செயலாளர் வெண்ணிலா,மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுப்புராஜ், துணைசெயலாளர் முருகன்,மாவட்ட இளைஞரணி துணைசெயலாளர் லட்சுமணன்,மாவட்ட பொறியாளர் அணி துணை செயலளர் கிரிதரன்,மதிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்
