கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரானதை முன்னிட்டு கோவில்பட்டி அருகே வானரமுட்டி இந்து துவக்கப்பள்ளியில் மக்கள் நீதி மய்யம், புத்துயிர் இரத்ததானகழகம், மக்கள் நலம் அறக்கட்டளை, கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் கோவில்பட்டி மேற்கு ஒன்றியச்செயலாளர் ராதாகிருஷ்ணன் முகாமிற்கு தலைமை தாங்கினார்.திமுக கோவில்பட்டி மேற்கு ஒன்றியச்செயலாளர் ராதாகிருஷ்ணன் முகாமினை துவக்கி வைத்தார்.

கண்விழி பரிசோதகர்கள் கணேஷ்வரி, ஜோதி, ஆகியோர் 62 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர் 18 பேர் மேல்சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

முகாமில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், நிர்வாகி நல்லய்யா, காங்கிரஸ் கட்சி மாவட்டச்செயலாளர் துரைராஜ், திமுக ஒன்றிய துணை செயலாளர் ராஜன் மாவட்ட கலை இலக்கிய பேரவை துணைச்செயலாளர் தாமோதரக்கண்ணன், ஒன்றிய விவசாய அணி துணைச்செயலாளர் ராஜு, கிளைச் செயலாளர் கிருஷ்ணசாமி, ஆவல்நத்தம் லட்சுமணன், ஏஐடியுசி உத்தண்டராமன், நடராஜபுரத்தெரு பொதுமக்கள் நலவாழ்வு இயக்க தலைவர் செண்பகம், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் முத்துமாலை, சத்யா அய்யனார், இசக்கிமுத்து, நாகராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

