• June 15, 2025
கோவில்பட்டி

தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம்

தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம் கோவில்பட்டியில்  சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க  தலைவர் விஜய் ஆனந்த் தலைமை தாங்கினார். செயலாளர் வரதராஜன்  துனணத் தலைவர் ராஜ்குமார் பொருளாளர ராஜவேல்   மற்றும் நிர்வாகிகள் கார்த்திகேயன் .சுஜித்குமார்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில்தீப்பெட்டி விற்பனை மார்க்கெட்டை காப்பாற்ற சிகரெட் லைட்டர்  விற்பனைக்கு தடை வாங்குவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும்   சிவகாசியில் நடந்து முடிந்த தீப்பெட்டி நூற்றாண்டு விழாவிற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவில்பட்டி

கட்சி தொடக்க நாள்: பாஜக கொடியேற்று விழா

கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரதிய ஜனதா கட்சி தொடக்க நாளை முன்னிட்டு ராஜீவ்நகர் இ பி காலனி பகுதியில் மாவட்ட துணை தலைவர் பாலு தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் மகாலட்சுமி, பொதுச்செயலாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய தலைவர் மாடசாமி, முன்னாள் பொதுச் செயலாளர் சந்தானம், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து,மாவட்ட  செயலாளர் ஊடகப்பிரிவு ராஜகாந்தன்,அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் உமா செல்வி,செயற்குழு […]

கோவில்பட்டி

கவர்னருக்கு எதிரான தீர்ப்பு: கோவில்பட்டியில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கும் வகையில், கோவில்பட்டியில் நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. பயணியர் விடுதி முன்பு நகர திமுக செயலாளர்,கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில்  பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் ராமர்,சிவா,மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா,மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன், மாரிச்சாமி,நகர துணைச் செயலாளர் அன்பழகன்,அயலக அணி சுப்புராயன்,பின்னர் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என கோஷமிட்டனர். மத்திய […]

செய்திகள்

தென்காசியில் 17-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலகம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை மாதாந்திர வேலை வாய்ப்பு முகாம் வருகிற 17-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்கிறது.. தென்காசியில் இருந்து குத்துக்கல் வலசை செல்லும் வழியில்,  எபினெசேர் டைல்ஸ்  அருகில் கே.எப்.சி. பின்புறம் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது.  இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு பணியாளர்களை  தேர்வு செய்ய […]

செய்திகள்

டாஸ்மாக் வழக்கு – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை மத்திய அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டும், இந்த சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கிற்கு மத்திய அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. இந்த பதில் […]

பொது தகவல்கள்

நிழலில்லா நாள்- பின்னணி விவரம்

சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்பது பழமொழி. சிறு குச்சியும் பூமியை அளக்க உதவும் என்பது முதுமொழி! ஆச்சரியமாக இருக்கிறதா? இதை 2,200 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் செய்து காட்டினார். அவர், எரட்டோஸ்தனிஸ். பண்டைய கிரேக்கத்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரின் நூலக தலைமை நூலகர் இவர். ஒரு நாள் நூல்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது படித்த ஒரு தகவல் அவரை ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21 அன்று அலெக்சாண்ட்ரியா அருகே சைன் நகரில் கிணறுகளில் நண்பகல் நேரத்தில் […]

செய்திகள்

தமிழக கவர்னர் நிறுத்தி வைத்த 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்;  சுப்ரீம் கோர்ட்டு

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக கவர்னருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களை அவா் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்தும், குடியரசு தலைவருக்கு அனுப்புவதை எதிர்த்தும் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று அதிரடியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களும், கவர்னரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அங்கீகரிக்கப்பட்டதாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று  சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது..நீதிபதிகள் […]

ஆன்மிகம்

`சிவன் சொத்து குல நாசம்’ உண்மையான விளக்கம்

சிவன் சொத்து குலநாசம் என்கிற பழமொழியை நம்பி பலரும் சிவன் கோவிலில் கொடுக்கும் விபூதி மற்றும் குங்கும பிரசாதங்களை கூட வீட்டிற்கு கொண்டு வர தயக்கம் காட்டுகின்றனர் எந்த ஒரு பழமொழியும் சரியாக புரிந்து கொள்ளா விட்டால் நமக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளும் அங்கு தடைபட்டுவிடும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்த பழமொழி திகழ்கிறது சிவன் கோவில் மட்டுமல்ல எந்த ஒரு கோவிலில் இருந்தும் நீங்கள் சொத்துக்களை அபகரிக்க நினைத்தால் உங்கள் குலமே(வம்சம்) நாசம் அடையும் என்பது […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கிய 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தல் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவில்பட்டி  மறவர் காலனி சுடுகாடு அருகே கருப்பசாமி என்பவர் வீட்டில் கடத்தலுக்காக ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக தனிப்பிரிவு போலீசுக்கு த தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தனிப்பிரிவு போலீஸ் உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் தனிப்பிரிவு காவலர்கள் முத்துராமலிங்கம், அருணாச்சலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது  ரேஷன் அரிசியை  வாகனத்தில் ஏற்றி […]

கோவில்பட்டி

தங்கம் விலை தொடர்ந்து சரிவு ; இன்று பவுனுக்கு ரூ.480  குறைந்தது

ஒரு மாதமாக தொடர்ந்து விலை உயர்ந்து வந்த  தங்கம், கடந்த ஓரிரு நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 3-ந்தேதி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8 ,560-க்கும், பவுன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது. 4-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.160 குறைந்து, ரூ.8 ,400-க்கும், ஒரு பவுன் ரூ.1,280 குறைந்து ரூ.67 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. 5-ம் தேதி பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480 விற்பனையானது. கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8,310-க்கு விற்பனை […]