கவர்னருக்கு எதிரான தீர்ப்பு: கோவில்பட்டியில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கும் வகையில், கோவில்பட்டியில் நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
பயணியர் விடுதி முன்பு நகர திமுக செயலாளர்,கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் ராமர்,சிவா,மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா,மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன், மாரிச்சாமி,நகர துணைச் செயலாளர் அன்பழகன்,அயலக அணி சுப்புராயன்,பின்னர் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என கோஷமிட்டனர்.

மத்திய ஒன்றிய திமுக சார்பில் எட்டயபுரம் ரோட்டில் உள்ள மத்திய ஒன்றிய திமுக அலுவலகம் முன்பு மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் பட்டாசு வெடித்து,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பீட்டர்,மாவட்ட பிரதிநிதிகள் அசோக்குமார், தங்கச்சாமி,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாரதி,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன்,ஒன்றிய மகளிர் அணி பாலம்மாள்,தொமுச நாகராஜன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு , கற்பகம்,வழக்கறிஞர் நாகராஜ்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பொன்னுத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல்,மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இனாம்மணியாச்சி விலக்கு பகுதியில் மேற்கு ஒன்றியசெயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்,முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் சுப்புராஜ்,திமுக நிர்வாகிகள் முத்துராமன், ராஜன்,தாமோதரகண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷமிட்டு,பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

