• June 6, 2025

கோவில்பட்டியில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கிய 2 பேர் கைது

 கோவில்பட்டியில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கிய 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தல் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவில்பட்டி  மறவர் காலனி சுடுகாடு அருகே கருப்பசாமி என்பவர் வீட்டில் கடத்தலுக்காக ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக தனிப்பிரிவு போலீசுக்கு த தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து தனிப்பிரிவு போலீஸ் உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் தனிப்பிரிவு காவலர்கள் முத்துராமலிங்கம், அருணாச்சலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது  ரேஷன் அரிசியை  வாகனத்தில் ஏற்றி கொண்டிருப்பதை பார்த்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்த போது கருப்பசாமி என்பவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ரேஷன் அரிசி கடத்திக் கொண்டிருந்த புவனேஸ்வரன், செல்லத்துரை இருவரையும் கைது செய்த போலீசார் 2 டன்ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

கைது செய்யப்பட்ட இருவர், மற்றும் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு தூத்துக்குடி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனா்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *