“இல்லம் தோறும் நூலகம்” என்பது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளைக் குறிக்கிறது. இது ஒரு வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், வாசிப்பால் பயனடையவும் உதவுகிறது. தமிழக அரசு, வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் புத்தக திருவிழாக்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கோவில்பட்டிக் கிளைச் செயலாளர் பிரபுஜாய் இல்லத்தில் நூலகம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று […]
இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டல்களில் விரும்பி சாப்பிடும் கிரில் சிக்கன்,பிரை சிக்கனுக்கு முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைசை பயன்படுத்துகிறார்கள். மேலும் ஷவர்மா, தந்தூரி, சான்ட்விச், சலாட், பார்பிகியூ உள்பட துரித உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.இந்த நிலையில் முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது என்பன உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் […]
கோவில்பட்டியில் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பிரசவ வார்டு வளாகத்தில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது ஸ்ரீ ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர்மன்ற உறுப்பினரும் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிர்வாகியுமான சண்முகவேல் முன்னிலை வகித்தார். அன்னதான நிகழ்ச்சியை ஆசிரியை ஆனந்த வள்ளி சீனிவாசன் தொடங்கி வைத்தார். முன்னதாக உலக மக்கள் நலன் வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை […]
திருவாரூர் மாவட்டம் திருப்பாம்பரம் சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர், பாம்புரநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்,. மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி.தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் – காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மி. சென்றும் இத்தலத்தை அடையலாம். இக்கோவில் வரலாற்றை காண்போம்… கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி […]
தி.மு.க.வின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருப்பவர் துரைமுருகன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக உள்ளார். கடந்த 1996-2001ம் ஆண்டு வரை நடைபெற்ற கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் செயல்பட்டு வந்தார். அந்த காலக்கட்டத்தில் துரைமுருகன் தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அதன்பிறகு அமைந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் துரைமுருகன் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு […]
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அறிவுரைகள் வழங்குவது தொடர்பான கூட்டம் நடந்தது. பயணிகள் காத்திருப்பு அறையில் நடந்த கூட்டத்தில், பெண் பயணிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்களிடம் தூத்துக்குடி ரெயில்வே காவல் உதவி ஆய்வாளர் பெருமாள், மகாகிருஷ்ணன் ஆகியோர் பெண் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக விளக்கினர். பெண்கள் அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் குளிர்பானங்களையோ அல்லது தின்பண்டங்களையோ வாங்கி உண்ண வேண்டாம். ரெயில் பயணத்தின்போது நகைகளை அணிந்து கொண்டு ஜன்னல் ஓரத்தில் அமர்வதையும், படுத்து […]
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானது என, அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும், சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தினர்.. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் கருங்கடல் கிராமம் மேல பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தங்கத்துரை- விஜயா தம்பதியரின் மகன் பெலிக்ஸ் காபிரியேல் மார்க் (வயது 27). சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் (ஆட்டோ மொபைல்) படிப்பை கடந்த 2019ஆம் ஆண்டு முடித்தார். அதன்பின் அவர் எதிர்பார்த்த பணி கிடைக்கவில்லை. இதனால் அவரது தந்தை தங்கத்துரை, ஐஏஎஸ் தேர்வு எழுத வலியுறுத்தினார். முதலில் அத்தேர்வு கடினம் என மறுத்து வந்த பெலிக்ஸ் காபிரியேல் மார்க், பின்னர் தந்தை […]
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் கோவில்பட்டி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி அரசியல் சாசன சட்ட உரிமை தொழிற்சங்க கூட்டு பேர உரிமையை பறிப்பதை கண்டித்தும், தொழிற்சங்க கொடிமரம் தகவல் பலகையை அகற்றி தொழிற்சங்க கூட்டு பேர உரிமை பறிப்பு ஜனநாயக படுகொலை நடத்துவதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவில்பட்டி கோட்டத்தலைவர் பரணிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் […]
நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்த டி.ஜெயக்குமார், தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியும், அடியாட்களை வைத்து மிரட்டியும் தனது நிலத்தை அபகரித்து கொண்டதாக, அவரது மருமகன் நவீன்குமாரின் சகோதரர் மகேஷ் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை […]