• June 10, 2025
கோவில்பட்டி

மீண்டும் 100 நாள் வேலை வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி தாலுகா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 7 ஊராட்சிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் தொடங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமை தாங்கினார். மாதர் சங்க நகர செயலாளர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஊராட்சி ஒன்றிய அதிகாரியை சந்தித்து அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:- கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மந்தித்தோப்பு, பாண்டவர் […]

செய்திகள்

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு, வாடிகன் சென்றார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) உடல்நலக்குறைவால் கடந்த 21ம் தேதி உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் இறுதிச்சடங்கு 26-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. போப் பிரான்சிஸ் உடல் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்றைய தினம் சுமார் 8 மணி நேரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போப் […]

செய்திகள்

எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு ரத்து

நாடாளுமன்றத் தேர்தலின்போது, மத்திய சென்னையில் பிரசாரம் செய்த அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக தயாநிதிமாறன் எம்.பி., செலவிடவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கு கடும் எதிப்பு தெரிவித்த தயாநிதி மாறன், தன்னை பற்றி தொகுதியில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததற்காக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கை ரத்து செய்ய […]

செய்திகள்

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விடுவிப்பு உத்தரவு ரத்து

கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மற்றும் அவரது மனைவி, மகன் மீது வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான […]

செய்திகள்

காந்திகிராம கஸ்தூரிபா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கவுசல்யா தேவி காலமானார்

திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம நிறுவனங்களில் ஒன்றான கஸ்தூரிபா மருத்துவமனையில் சுமார் 60 ஆண்டு காலம் மருத்துவராக பணி செய்த டாக்டர் கவுசல்யா தேவி (வயது 95) வயது மூப்பின் காரணமாக  நேற்று மதியம் இயற்கை எய்தினார். தூத்துக்குடிமாவட்டம்,விளாத்திக்குளத்தை அடுத்த அருணாசலபுரத்தை பூர்வீகமாக் கொண்ட இவர், சென்னை மருத்துவக் கல்லூரியில்1959-ஆம் ஆண்டு டாக்டர் பட்டப்படிப்பை  முடித்தார். இதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம், கோபிச்செட்டிப்பாளையம், சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றினார். காந்திகிராம நிறுவனர் டாக்டர் சவுந்திரத்தின் சேவை அறிந்து  அரசு […]

கோவில்பட்டி

காஷ்மீரில் 26 சுற்றுலா பயணிகள் பலி: கோவில்பட்டியில் பாஜக சார்பில் மோட்சதீபம் ஏற்றி

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்கு கோவில்பட்டியில் பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தி மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.  அண்ணா பஸ் நிலையம் அருகே பயணியர் விடுதி முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு நகர பாஜக தலைவர் காளிதாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் மகாலட்சுமி வேல்முருகன், மாவட்ட பொதுச் செயலாளர் வேல்ராஜா, மாவட்ட பொருளாளர் கணேஷ், பட்டியல் அணி மாநில செயலாளர் சிவந்திநாராயணன் […]

செய்திகள்

பஹல்காம் தாக்குதல் : பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் அதிரடி  நடவடிக்கைகள்

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடந்த  இக்கூட்டத்தில் மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2½ மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-* இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படுகிறது. * சிந்து நதி ஒப்பந்தத்தை […]

செய்திகள்

மேலும் ஒரு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து

நீர்வளத் துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன் கடந்த 1996- 2001 வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில்  இருந்து  அவரை விடுவித்து வேலூர் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், அமைச்சர் துரைமுருகன் மீதான வழக்கை மீண்டும் வேலூர் கோர்ட்டு விசாரிக்க வேண்டும். அவரை வழக்கிலிருந்து விடுவித்த உத்தரவை ரத்து […]

செய்திகள்

“எடப்பாடியாரை வணங்கி பேச்சை தொடங்குவதாக’… சட்டசபையில்  செங்கோட்டையன் திடீர் புகழாரம்

அ.தி.மு.க.வில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சரும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.செங்கோட்டையன் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இருவரும் பெயரைக் குறிப்பிட்டு பேசுவதை தவிர்த்து வந்தனர். குறிப்பாக, கே.ஏ.செங்கோட்டையன் பொதுக்கூட்ட நிகழ்வுகளில் பேசும்போது, எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடுவதை தவிர்த்து வந்தார். சென்னையில் நேற்று இரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்திருந்த விருந்திலும் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்காமல் இருந்தார். இதற்கிடையே, தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பள்ளி […]

செய்திகள்

திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு வழக்கம் போல் செல்ல அனுமதி

நெல்லை மாவட்டம் களக்காடு வனச்சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. ‘இப்பணிகளை புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தொடங்கி வைக்கிறார். வனசரகர் பிரபாகரன் தலைமையில் வனத்துறையினர் வரையாறு கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். இதனை முன்னிட்டு களக்காடு தலையணை வனப்பகுதி மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் முதலில் அறிவித்தனர். எனினும் கோடை விடுமுறையை முன்னிட்டு களக்காடு தலையணை மற்றும் […]