தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தை கே.வி. மகாலில் தேமுதிக தலைமை செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்துகொண்டு கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும், கட்சிபணிகள், எதிர்கால அரசியலில் முக்கிய முடிவுகள், திட்டங்கள் குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். இந்த நிலையில், தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேமுதிக பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தர்மபுரி […]
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 -வது பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு காஞ்சி மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அட்சய திருதியை தினமான இன்று (புதன் கிழமை) அதிகாலை சந்நியாஸ்ரம தீட்சை வழங்கினார். இந்த நிகழ்ச்சி மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்த திருக்குளத்தில் நடைபெற்றது. இதனையடுத்து காஞ்சி காமாட்சி அம்மன் சந்நிதியில் […]
கோவில்பட்டி ஜி.வி.என் (தன்னாட்சி) கல்லூரியின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், பிளஸ் 2 தேர்வுகளை எழுதி முடித்த மாணவிகளுக்காக ஒரு வார இலவச கோடைகால பயிற்சி வகுப்புகள் (21.04.2025 முதல் 29.04.2025 வரை) நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்புகளில், கணினி அடிப்படைத் தகவல்கள், அடிப்படை மின்னணுவியல், மொழிப்புலமை பயிற்சிகள் மற்றும் தையல் பயிற்சி ஆகியவை உள்ளடக்கப்பட்டிருந்தன. கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சிகளை செய்முறை அடிப்படையில் வழங்கினார்கள், மேலும் அவர்களின் ஆர்வத்தையும், கல்வித் திறனையும் வளர்க்கும் வகையில் […]
தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் 26 ஊர்க்காவல் படை வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மையை பாராட்டி டெல்லி பொது இயக்குநரகம் – தீயணைப்பு சேவைகள், குடிமை பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வரும் படைத் தளபதி உலகம்மாள் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக பாராட்டு சான்றிதழ் மற்றும் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். உள்துறை அமைச்சகம் மூலமாக […]
கோவில்பட்டி கிரா நினைவரங்கத்தில் போன்சாய் புக்ஸ் நிறுவனத்தின் சார்பில் எழுத்தாளர் தங்கத்துரையரசி ஏற்பாடு செய்திருந்த ‘வாசகம்’ என்ற உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. எழுத்தாளர் கண்மணிராசா எழுதிய ‘கூத்து’ சிறுகதைத் தொகுப்பு குறித்து அதனை வாசித்தவர்கள் தங்கள் வாசக அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். போன்சாய் புக்ஸ் ப்ரியதர்ஷினி, சிறார் எழுத்தாளர் வரகவி முருகேசன், ஜீவாசுரேஷ், மாரிச்செல்வி,மகாலட்சுமி,இந்துமதி,எழுத்தாளர்கள் ராம்சித்ரா,பொன்னு லட்சுமி,மழயிசை, உஷா,பத்மா சிங்கராயன், முகிலன், முத்து முருகன்,தினகரன்,குமரேசன்,செல்வக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு தொகுப்பிலுள்ள கதைகள் குறித்துப் பேசினர். ஒரு படைப்பு குறித்து […]
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே அழகுநாச்சியார் புரத்தில் இருந்து இன்று காலை தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குசாலையில் நாற்று அறுப்பு பணிக்காக 12 பெண்கள் சரக்கு வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர். இந்த வாகனத்தை அதே ஊரைச் சேர்ந்த சின்னகுருசாமி மகன் காளி மகராஜன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த வாகனம் எப்போதுவென்றான் பாலம் அருகே வந்தபோது முன்னால் காற்றாலை இறக்கைகளை ஏற்றி வந்த லாரியை முந்தி செல்ல முயன்றபோது அவ்வழியே வந்த டிராவல்ஸ் வேன், சரக்கு வாகனம் மீது […]
தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு இன்று காலை கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் நடைபெற்றது 50-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் தேர்வில் கலந்து கொண்டனர் இவர்களில் 21 வீராங்கனைகள் பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி தலைமையில் தேர்வு குழு உறுப்பினர்களான காமராஜ் மெட்ரிக் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார் ஆக்கி யூனிட் ஆப் […]
அகில பாரத இந்து மகா சபா சார்பில் கோவை முதல் குமரி வரை இந்து ஸ்வாமிமான் யாத்திரை இந்துக்களின் விழிப்புணர்வு யாத்திரை கடந்த 25-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த யாத்திரை நேற்று மாலை கோவில்பட்டி வந்தடைந்தது. தொடர்ந்து கிருஷ்ணன் கோவில் திடலில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. அர்ச்சகர் பேரவை மாநில அமைப்பாளர் பாலகிருஷ்ணசர்மா தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணைத் தலைவர் சங்கர் ராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தலைவர் […]
கோவில்பட்டி அருணாசல பேட்டை தெருவில் நூடார் உறவின் முறைக் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உருவாக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் மார்ச் மாதம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவிலின் தினசரி பூஜைகள் விவரம் அறிவிக்கபட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- காலை 5-30 மணி- நடைதிறப்பு காலை 6 மணி- திருப்பள்ளியெழுச்சி காலை 9- மணி -கால சந்தி பூஜை பகல் 11-50 மணி- உச்சி கால […]
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து நடத்திய மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் […]