• May 21, 2025

Month: April 2025

தூத்துக்குடி

தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிப்பு; குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை

தமிழகத்தில் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி முக்கிய தொழிலாகும். இந்த தொழிலில் சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு தமிழ்நாடு மட்டுமல்லாது, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கும் ஏற்றுமதி  செய்யப்படுகிறது, பருவம் தவறிய  மழை மற்றும்,  வானிலை மாற்றம் போன்றவற்றால் , ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் தொடங்க வேண்டிய உப்பு உற்பத்தி […]

செய்திகள்

ஒரு பவுன் தங்கம் ரூ.72 ஆயிரத்தை கடந்தது

தங்கம் விலை கடந்த 9-ந்தேதியில் இருந்து தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 9-ந்தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 410-க்கும், ஒரு பவுன் ரூ.67 ஆயிரத்து 280-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, 10-ந்தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560க்கும், கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.8,945க்கும் விற்பனை செய்யப்பட்டது. […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் 27-ந்தேதி இலவச கண் பரிசோதனை முகாம்

கோவில்பட்டி   1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம்,  அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து  மாதம்தோறும்   கடைசி ஞாயிறு அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகிறது. இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை யான 27 ம் தேதி கோவில் பட்டி   ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. காலை   10 மணி முதல்   […]

செய்திகள்

போப் பிரான்சிஸ் காலமானார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தவர் போப் பிரான்சிஸ்(வயது 88). இவருக்கு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்  ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.  நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், வைரசுகள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்று பாதிப்பும் ஏற்பட்டிருந்தது. மருத்துவமனையில்  5 வாரங்களுக்குமேலாக சிகிச்சையில் இருந்து  போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில் […]

செய்திகள்

நிதி ஒதுக்கீடு குறைவு: சட்டசபையில் அமைச்சர் குற்றச்சாட்டு

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, கூடலூர் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன், தனது தொகுதியில் சிறு தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்று அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “இந்த கூட்டத் தொடரிலேயே எனது துறையில் உள்ள சிக்கல்களை தெரிவித்து இருக்கிறேன். நிதி குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப்போல் தொழில்நுட்ப பூங்காக்கள் எங்கள் துறையின் கீழ் வருவதில்லை. டைடல் பூங்கா […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நகர திமுக சார்பில் நீர், மோர் பந்தல்

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி நகர தி.மு.க சார்பில் நகர கழக அலுவலகம் முன்பு அமைந்துள்ள தமிழரசன் படிப்பகத்தில் கோடை வெயிலுக்கு நீர்,மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் திமுக நகர செயலாளர் கருணாநிதி நீர்,மோர் பந்தலை திறந்து வைத்து,பொதுமக்களுக்கு வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன்,மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா,மாவட்ட பிரதிநிதி ரவீந்திரன்,நகர அவைத்தலைவர் முனியசாமி,நகர பொருளாளர் ராமமூர்த்தி,மாவட்ட அறங்காவலர் குழு இந்துமதி,நகர மகளிர் அணி சுதாகுமாரி,வழக்கறிஞர் ராமச்சந்திரன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன்,அயலக […]

தூத்துக்குடி

டி.என்.பி.எஸ்.சி, குரூப்-I பணிக்கான  மண்டல அளவிலான மாதிரி தேர்வுகள்  

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி  வழிகாட்டும் மையத்தின் வாயிலாக குரூப்-I பணிக்கான  மண்டல அளவிலான நேரடி மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. 5 வது  மாதிரி தேர்வு 22.4.2025 ( செவ்வாய்க்கிழமை) காலை 10:30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறும்.  டி.என்.பி.எஸ்.சி, குரூப்-I பணிக்கான  மாதிரி தேர்வுக்கு விண்ணப்பிக்கும்  போட்டி தேர்வர்கள் மட்டும் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ளலாம். இந்த நேரடி மாதிரி தேர்வில் […]

செய்திகள்

மல்லை சத்யாவுடன் சமரசம்: கட்சி பதவி விலகல் முடிவை துரை வைகோ வாபஸ்

ம.தி.மு.க. முதன்மைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து,  துரை வைகோ நேற்று விலகுவதாக அறிவித்தார். தன்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தை வைகோவுக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும், மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்றும் அறிக்கை யில் கூறி இருந்தார். இந்த நிலையில் இன்று சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் மதிமுக நிர்வாகக் குழு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அதிமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம் 

பெண்களை தரக்குறைவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக நகரசெயலாளர் விஜயபாண்டியன் தலைமை தாங்கினார்.முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன்,மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,முன்னாள் மாவட்ட ஊராட்சிகுழு தலைவி சத்யா,அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் முருகேஸ்வரி, வழக்கறிஞர்கள் ஈஸ்வரமூர்த்தி,சங்கர் கணேஷ்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,அமைப்புசாரா ஓட்டுனர் அணி லட்சுமணபெருமாள், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் […]

கோவில்பட்டி

பள்ளி மாணவர்களுக்கான கலை கல்வித் திருவிழா

புதூர் காமன் எம்ப்வர்மென்ட் சர்வீஸ் சொசைட்டி மற்றும் சாய் திறன் வளர்ப்பு பயிற்சி மையம் இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான கலை கல்வித் திருவிழா நாகலாபுரம் கம்மவார் திருமண மஹாலில்  நடைபெற்றது. இவ்விழாவில் தமிழகத்தில் உள்ள 28க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.மேலும் 165 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய சந்தேகங்கள் மற்றும் பொறியியலில் சேரும் முறைகள் கல்வி கட்டணம் சலுகைகள் வங்கி கடன் பெறுவது பற்றிய ஆலோசனைகள் அனைத்தும் தெரிந்து கொண்டனர். […]