• May 21, 2025

Month: April 2025

கோவில்பட்டி

கோவில்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று மாலை ராகு கேது பெயர்ச்சி விழா

கோவில்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று  சனிக்கிழமை ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது மாலை 4:20 மணிக்கு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு ராகு பகவானும் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு கேது பகவானும் பெயர்ச்சியாகின்றனர். ‘அதன் அங்கமாக மாலை 3 மணி அளவில் அபிஷேக பூஜைகள் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 4.20 மணிக்கு தீபாராதனை நடைபெறும் . மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் உலக புத்தக தின விழா

இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் சார்பாக உலக புத்தக தினம் கோவில்பட்டி மைக்ரோ பாயிண்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தில்  நடைபெற்றது. உலக புத்தக தினம் மற்றும் புத்தகங்கள் வாசிப்பு குறித்து அரசு பள்ளி உதவி தமிழாசிரியர் முருகசரஸ்வதி  சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் இந்திய கலாச்சார நட்புறவுக் கழக மாநில செயலாளர் க. தமிழரசன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார்  கருப்பசாமி, நிர்வாகி நல்லையா, உலகத்திருக்குறள் கூட்டமைப்பு முத்துச்செல்வம், காங்கிரஸ் கட்சி அருள்தாஸ், பிஎஸ்என்எல் துரைராஜ்,  ஐ என் டி […]

செய்திகள்

“சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாறு தெரியாமல் கருத்துக்களை வெளியிடக்கூடாது ” – ராகுல்

வீர் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம்கோர்ட்டில், நீதிபதி திபான்கர் தத்தா தலைமையிலான அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ராகுல் காந்திக்கு நீதிபதிகள் கடுமையான கேள்விகளை எழுப்பினர். அதில், “காந்தி கூட தனது கடிதத்தில் Faithful servant என்ற வார்த்தையே பயன்படுத்தி இருந்தார்.. அப்படியென்றால் காந்தி ஆங்கிலேயருக்கு வேலைக்காரர் என்று அர்த்தமா?..  அப்படித்தான் பொருள்படுமா? சாவர்க்கருக்கு எதிராக ஏன் […]

செய்திகள்

கவர்னர் ஏற்பாட்டில் துணைவேந்தர்கள் மாநாடு: அரசு பல்கலைக்கழகங்கள் புறக்கணிப்பு

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள பல்கலைக்கழக  துணைவேந்தர்களுக்கான மாநாடு உதகையில் இன்று தொடங்கியது. கடந்த 3 ஆண்டுகளாக உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் ரவி நடத்தி வருகிறார். நான்காவது ஆண்டாக, உதகை கவர்னர் மாளிகையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த 2 நாள் மாநாட்டை குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். இந்த துணை வேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியது. கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக […]

கோவில்பட்டி

மீண்டும் 100 நாள் வேலை வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி தாலுகா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 7 ஊராட்சிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் தொடங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமை தாங்கினார். மாதர் சங்க நகர செயலாளர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஊராட்சி ஒன்றிய அதிகாரியை சந்தித்து அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:- கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மந்தித்தோப்பு, பாண்டவர் […]

செய்திகள்

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு, வாடிகன் சென்றார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) உடல்நலக்குறைவால் கடந்த 21ம் தேதி உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் இறுதிச்சடங்கு 26-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. போப் பிரான்சிஸ் உடல் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்றைய தினம் சுமார் 8 மணி நேரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போப் […]

செய்திகள்

எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு ரத்து

நாடாளுமன்றத் தேர்தலின்போது, மத்திய சென்னையில் பிரசாரம் செய்த அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக தயாநிதிமாறன் எம்.பி., செலவிடவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கு கடும் எதிப்பு தெரிவித்த தயாநிதி மாறன், தன்னை பற்றி தொகுதியில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததற்காக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கை ரத்து செய்ய […]

செய்திகள்

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விடுவிப்பு உத்தரவு ரத்து

கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மற்றும் அவரது மனைவி, மகன் மீது வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான […]

செய்திகள்

காந்திகிராம கஸ்தூரிபா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கவுசல்யா தேவி காலமானார்

திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம நிறுவனங்களில் ஒன்றான கஸ்தூரிபா மருத்துவமனையில் சுமார் 60 ஆண்டு காலம் மருத்துவராக பணி செய்த டாக்டர் கவுசல்யா தேவி (வயது 95) வயது மூப்பின் காரணமாக  நேற்று மதியம் இயற்கை எய்தினார். தூத்துக்குடிமாவட்டம்,விளாத்திக்குளத்தை அடுத்த அருணாசலபுரத்தை பூர்வீகமாக் கொண்ட இவர், சென்னை மருத்துவக் கல்லூரியில்1959-ஆம் ஆண்டு டாக்டர் பட்டப்படிப்பை  முடித்தார். இதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம், கோபிச்செட்டிப்பாளையம், சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றினார். காந்திகிராம நிறுவனர் டாக்டர் சவுந்திரத்தின் சேவை அறிந்து  அரசு […]

கோவில்பட்டி

காஷ்மீரில் 26 சுற்றுலா பயணிகள் பலி: கோவில்பட்டியில் பாஜக சார்பில் மோட்சதீபம் ஏற்றி

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்கு கோவில்பட்டியில் பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தி மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.  அண்ணா பஸ் நிலையம் அருகே பயணியர் விடுதி முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு நகர பாஜக தலைவர் காளிதாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் மகாலட்சுமி வேல்முருகன், மாவட்ட பொதுச் செயலாளர் வேல்ராஜா, மாவட்ட பொருளாளர் கணேஷ், பட்டியல் அணி மாநில செயலாளர் சிவந்திநாராயணன் […]