• June 13, 2025

“சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாறு தெரியாமல் கருத்துக்களை வெளியிடக்கூடாது ” – ராகுல் காந்தியை கண்டித்த சுப்ரீம்கோர்ட்டு

 “சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாறு தெரியாமல் கருத்துக்களை வெளியிடக்கூடாது ” – ராகுல் காந்தியை கண்டித்த சுப்ரீம்கோர்ட்டு

வீர் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம்கோர்ட்டில், நீதிபதி திபான்கர் தத்தா தலைமையிலான அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் ராகுல் காந்திக்கு நீதிபதிகள் கடுமையான கேள்விகளை எழுப்பினர். அதில், “காந்தி கூட தனது கடிதத்தில் Faithful servant என்ற வார்த்தையே பயன்படுத்தி இருந்தார்.. அப்படியென்றால் காந்தி ஆங்கிலேயருக்கு வேலைக்காரர் என்று அர்த்தமா?..  அப்படித்தான் பொருள்படுமா?

சாவர்க்கருக்கு எதிராக ஏன் இப்படியான பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பேச்சை பேசுகிறீர்கள்? நீங்கள் அரசியல் தலைவர்தானே.. பின்னர் ஏன் சமூகத்தில் சலசலப்பை உருவாக்கும் வகையில் பேசுகிறீர்கள்?

உங்களது பாட்டி, இந்திரா காந்தி, பிரதமராக இருந்தபோது, சாவர்க்கரை பாராட்டி கடிதம் எழுதியிருந்தது தெரியுமா..? எனவே, சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து  பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம். சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு தெரியாமல் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடக்கூடாது.

இதுபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பொறுப்பற்ற அவதூறு கருத்துக்களை வருங்காலத்தில் பேசினால் தானாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, ராகுல் காந்திக்கு உத்தரப்பிரதேச மாஜிஸ்திரேட் கோர்ட்டு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டதோடு, ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக எதிர்மனுதாரர் நிர்பேந்திர பாண்டே பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *