• May 21, 2025

Month: April 2025

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே புளியங்குளம் நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்; துரை வைகோ

கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ஏ.பி.ஏ.சி. நடுநிலைப்பள்ளியில் தனியார் தொழிற்சாலையின் தொழிலக சமுக பங்களிப்புத் திட்டம் மற்றும் கிராம மக்கள் சார்பில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.  இதன் திறப்பு விழா நடந்தது.  செமிக்ரோமேடிக் தொழிற்சாலை அதிகாரி யோகசுந்தரம் தலைமை தாங்கினார். ஸ்ரீவாரி அலாய்ஸ் நிர்வாக இயக்குநர் அசோகன் முன்னிலை வகித்தார். மதிமுக துணைப் பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் வரவேற்றார். பள்ளிக்கட்டிடத்தை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. […]

கோவில்பட்டி

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற ஆய்வு சொற்பொழிவு

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் 54 ஆம் ஆண்டு திங்கள் ஆய்வு சொற்பொழிவு திருவள்ளுவர்அரங்கில் இன்று நடைபெற்றது. டாக்டர் சீனிவாசகன் தலைமை தாங்கினார். எழுத்தாளர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். மன்றச் செயலாளர் நம்.சீனிவாசன் வரவேற்று பேசினார்.  சங்கரன்கோவில் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கர்ராம் நாட்டுப் புறப்பாடல்கள் காட்டும் சமூகப் பார்வை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  ஜான் கணேஷ்,, அமல புஷ்பம், தேசிய விநாயக சுந்தரி ஆகியோர் கருத்துரை வழங்கினர். மன்றத்தலைவர் கருத்தப்பாண்டி நன்றி கூறினார். மாணவ – 2 […]

கோவில்பட்டி

மாவட்ட சப் ஜூனியர் பெண்கள் மற்றும் சீனியர் ஆண்கள் ஆக்கி அணிகள் தேர்வு;

மாவட்ட ஆக்கி அணிகள் தேர்வு குறித்து ஆக்கி யூனிட்  ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமை நாயகம், செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி ஆகியோர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-  சப் ஜூனியர் பெண்கள் மாநில சாம்பியன் போட்டி புதுக்கோட்டையில் மே 5 முதல் 8 வரை நடக்கிறது.மாநில சீனியர் ஆண்கள் சாம்பியன் போட்டி கோவில்பட்டியில் மே 10 முதல் 14 வரை ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பாக போட்டிகள் நடைபெற உள்ளன. […]

கோவில்பட்டி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில்  இன்று காலை  திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.  இது குறித்த தகவல் கிடைத்ததும்,  சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பட்டாசு தொழிற்சாலை  தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்.   ஆலையில் உள்ள 5 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.  காயம் அடைந்தவர்கள்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக […]

தூத்துக்குடி

கோடைவெயில்: பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே

தமிழ்நாட்டில் தற்போது கோடை வெப்ப அலைகளினால் வெப்ப தாக்கம் அதிகமாக உள்ளது. மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். சுற்றுப்புறச் சூழல் வெப்பநிலை அதிகமாகும் போது அதிகமான வியர்வை வழியாக உப்பு மற்றும் நீர்ச்சத்து அதிகமாக உடலிலிருந்து வெளியேறுகிறது. அதிக வெப்பத்தினால் அதிக தாகம், தலைச்சுற்றல், கடுமையான தலை வலி, தசைப்பிடிப்பு, உடல் சோர்வடைவதல், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். மேலும் பச்சிளம் குழந்தைகள், சிறுவர் சிறுமியர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் […]

கோவில்பட்டி

இணையதளம் மூலம் தேமுதிக  உறுப்பினர் சேர்க்கை

தூத்துக்குடி வடக்கு மாவட்டம்  விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் இணையதளம் மூலம் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. .நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி தலைமை தாங்கினார்.பேரூர் செயலாளர் கோட்டைச்சாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ் முகாமை தொடங்கி வைத்தார். https://members.dmdkparty.com/ இணையதளம் மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். மாவட்ட துணைசெயலாளர் ராஜபாண்டி, மாவட்ட தொழிற்சங்க தலைவர் மினாட்சிசுந்தரம்,மாவட்ட பொறியாளர் அணி துணைசெயலாளர் கிரிதரன்,மாவட்ட இளைஞரணி துணைசெயலாளர் பிச்சைமணி, சமூகவலைதள அணி சிவமுருகன், ஒன்றிய நிர்வாகிகள் […]

கோவில்பட்டி

தீவிரவாதிகளை அகற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்; வைகோ

மதிமுக முன்னாள் எம்.பி. ரவிசந்திரன் மகள் ஸ்ரீரேகா –திவாகர் திருமணம் கோவில்பட்டி ராம் அனுமான் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கலந்து கொண்டு திருமணத்தினை நடத்தி வைத்தார். மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி.மற்றும் மதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில் கூறியதாவது:- திமுகவில் 30 ஆண்டுகள், மதிமுகவில் 31 ஆண்டுகள் என 61 ஆண்டுகள் அரசியல் மற்றும் […]

கோவில்பட்டி

சாத்தூர் அருகே சரக்கு ஆட்டோ-கல்லூரி பஸ் மோதல்

கோவில்பட்டியை அடுத்த சாத்தூர் பகுதியில் இருந்து இன்று மதியம் 1.30 மணி அளவில் பட்டாசு ஆலையில் இருந்து புஸ்வானம் ஏற்றிக்கொண்டு சிவகாசி நோக்கி ஒரு சரக்கு ஆட்டோ சென்றது. மேட்டமலை என்ற பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாசல் பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைக்க தடுப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் சரக்கு ஆட்டோவும். சிவகாசியில் இருந்து சாத்தூர் நோக்கி  வந்த இன்னொரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பஸ்சும் நேருக்கு நேர் […]

செய்திகள்

கர்நாடகத்துக்கு சுற்றுலா: கடலில் மூழ்கி திருச்சி மருத்துவ மாணவிகள் 2 பேர் பலி

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவிகள் 23 பேர் கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் தாண்டேலி, கோகர்ணா, முருடேஸ்வருக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் கோகர்ணாவில் உள்ள குட்லே கடற்கரை அருகே ஜடாயுதீர்த்த கடற்கரைக்கு சென்றனர். மாலை 6.20 மணி அளவில் மாணவிகள் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். அந்த சமயத்தில் ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி  மாணவிகள் கனிமொழி ஈஸ்வரன் (வயது 23), இந்துஜா நடராஜன் (23). ஆகியோர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதனால் […]

கோவில்பட்டி

சுடுகாட்டில் 11 கிலோ கஞ்சா பதுக்கல்; கல்லூரி மாணவர் உட்பட 3 பேர்

கோவில்பட்டி புது கிராமம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனி பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ்  உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன் தலைமையில் காவலர் கழுகாசலமூர்த்தி மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் செசிலின் வினோத், முத்துராமலிங்கம், அருணாச்சலம் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். போலீசார் சென்றதும் சுடுகாடு பகுதியில் நின்றிருந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஒரு சிலரை போலீசார் சுற்றி வளைத்து 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சுடுகாட்டுப் பகுதியில் […]