• June 15, 2025

Month: March 2025

கோவில்பட்டி

வெம்பூர் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு: முதல் அமைச்சருக்கு கிராம மக்கள்  தபால் அனுப்பும்

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் வட்டத்திற்குட்பட்ட வெம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, இராமசாமிபட்டி, பட்டித்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் 2,700 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதற்கு விவசாயிகளின் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வெம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலத்தில் இருந்து சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தேமுதிக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில்  கோவில்பட்டி ரெயில்நிலையம் முன்பு நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு மாவட்டச்செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில மகளிரணி துணைசெயலாளர் சுபபிரியா தண்ணீர்ப்பந்தல் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள்,நீர் மோர் வழங்கினார். நகரச்செயலாளர் நேதாஜி பாலமுருகன், மாவட்ட அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், மலைராஜ், ஒன்றிய செயலாளர் பெருமாள்சாமி, கயத்தார் நகர செயலாளர் கண்ணன், மாவட்ட […]

பொது தகவல்கள்

பனங்கிழங்கில் மருத்துவ குணங்கள் ….

பனங்கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது தமிழ்நாட்டின் மாநில மரம் ஆக விளங்கும்  பனை  மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய ஒரு வகை கிழங்கு இது. பனை  மரத்தில் இருந்து கிடைக்கும் பனம் பழத்தை சாப்பிட்டு அந்த கொட்டையை மண்ணில் புதைத்து வைத்தால்,  அதிலிருந்து பனங்கிழங்கு கிடைக்கும்.   எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கை நாம் அடிக்கடி சாப்பிடு வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம். பொட்டாசியம், வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. நார்ச்சத்து, […]

தூத்துக்குடி

சாதி, மத ரீதியான மோதலை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மத ரீதியாக மோதல்களை தூண்டும் வகையிலோ, தலைவர்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்தோ, ஆயுதங்களுடன் புகைப்படம் அல்லது பாடல்களை ஒலிக்கச் செய்து இரு பிரிவினருக்கிடையே மோதலையோ, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்பவர்களை மாவட்ட காவல்துறை கண்காணித்து வருகிறது.’ கடந்த 6 மாதங்களில் மட்டும் இது போல் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக 23 […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம்-நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி நடைபெற்றது. விழாவிற்கு கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கர்கணேஷ் தலைமை தாங்கினார். புதிய கட்டிடத்தையும்,புத்தக கண்காட்சியையும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி  பார்வையிட்டார். நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி மாரிக்காளை, முனிசீப் நீதிபதி கருப்பசாமி, விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் […]

தூத்துக்குடி

தீவிபத்தில் சேதம்: அனல்மின் நிலையத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்; மின் ஊழியர்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில்  தீ விபத்தில் அனல்மின் முதலாவது மற்றும் இரண்டாவது யூனிட்டுகள்  முற்றிலும் எரிந்து சேதம் ஆகி உள்ளது. இதன் காரணமாக 3 யூனிட்டுகளில்  மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக  630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் இந்த பணிகளை சரி செய்ய 6 மாதம் ஆகும் என்று சொல்லபப்டுகிறது,. சேதமடைந்த பகுதிகளை சீர் செய்ய முதலில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். இந்நிலையில் தமிழக அரசு தூத்துக்குடி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் இளம் மழலையர் பட்டமளிப்பு விழா

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் இளம் மழலையர்களுக்கான  பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி செயலாளர் வக்கீல்  செல்வம்  முன்னிலை வகித்தார்., பொருளாளர் பாஸ்கரன் மற்றும் பள்ளிக்குழு உறுப்பினர்கள்  செந்தில் குமார், பொன்ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் பிரபு ஆண்டு அறிக்கை வாசித்தார் நாடார் மேல்நிலைப்பள்ளி உறுப்பினர் வேல்முருகன் மற்றும் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக […]

ஆன்மிகம்

ஹோமத்தில் போடும் பொருட்களும் அவற்றின் பலன்களும்

நெய் -தூய்மை, நல்ல ஆற்றல், நல்வாழ்வு, தெய்வ அனுகூலம். அரிசி -செல்வம், சமாதானம், குடும்ப ஒற்றுமை. கரும்பு மற்றும் வெல்லம்-இன்பம், சந்தோஷம், நல்ல குடும்ப வாழ்க்கை. எள்- பாப நிவர்த்தி, தீய சக்திகள் நீக்கம், முன்னோர்கள் திருப்தி. அரிக்கேல் -சுத்தம், சகல ஸவபாக்கியங்களும் கிடைக்கும். அகிலம் மற்றும் சந்தனம்-ஆன்மீக சுத்தி, மன அமைதி, தெய்வ அன்பு. குங்கிலியம் மற்றும் சம்பிராணி-வீடு மற்றும் சுற்றுச்சூழல் பரிசுத்தம், நற்குண வளர்ச்சி. துளசி- நோய் தீர்வு, புனித சக்தி, நல்ல சிந்தனை. […]

செய்திகள்

சபாநாயகர் அப்பாவுவை நீக்கக்கோரி அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளாக சபாநாயகராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், அப்பாவுவை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்திருந்தார். தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, அதாவது நேற்று (திங்கட்கிழமை) அந்த தீர்மானத்தின் மீது விவாதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி  நேற்று காலை சட்டசபை கூட்டத்தில் கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரமான ‘ஜீரோ அவர்’ எடுக்கப்பட்டது. […]