கோவில்பட்டி ஹோலி டிரினிட்டி பள்ளியில் கோடைகால பெண்கள்ஆக்கி பயிற்சி முகாம் 14 நாட்கள் நடைபெற்றது பயிற்சி முகாமின் நிறைவு விழா பள்ளியின் இயக்குனர் மோசஸ், பள்ளியின் முதல்வர் ஷகீலா ராணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். பள்ளியின் உடற் கல்வி ஆசிரியர் ஸ்ரீனிவாசன் வீராங்கனைகளுக்கு ஆக்கி பயிற்சி அளித்தார் பயிற்சியில் 22 […]
கோவில்பட்டி ஜேசிஐ,அரவிந்த் கண் மருத்துவமனை,ஆசியா பார்ம்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. ஆசியாபார்ம்ஸ் நிறுவன வளாகத்தில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமிற்கு ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். பல் மருத்துவர் விஜய்,ஜேசிஐ முன்னாள் தலைவர் லட்சுமிவிக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஆசியா பார்ம்ஸ் உரிமையாளர் பாபு அனைவரையும் வரவேற்றார். புதுச்சேரி ராஜீவ் காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரோசரியா, கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார்.கோவில்பட்டி அரவிந்த் கண் […]
கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தின் திருவிழா 26 4 2024 வெள்ளி கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழாவின் 9ஆம் நாளான நேற்று மாலை 6.30 மணிக்கு திருத்தலவளாகத்தில் அமைந்துள்ள திருப்பலி பீடத்தில் புளியம்பட்டி பங்கு தந்தை மோட்சராஜன் அடிகளார்,பாளையங்கோட்டை மறைமாவட்ட பொறியாளர் ராபின் அடிகளார்,இளையரசனேந்தல் பங்குதந்தை சகாய சின்னப்பன் அடிகளார், கோவில்பட்டி உதவி பங்குதந்தை அந்தோணிராஜ் அடிகளார் இணைந்து இயேசுவின் இறைவேண்டல் எனும் மறையுறையுடன் திருப்பலி நிறைவேற்றினார்கள். }திருப்பலி முடிந்த உடன் திருத்தலத்திலிருந்து இரவு 8 […]
கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை கோவில்பட்டி நிலைய அலுவலகத்தில் சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது. தியாகம் செய்து மக்களை காப்பாற்றும் கடமையை செய்யும் தீயணைப்பு வீரர்களை ஊக்குவிப்பதற்காகவும், சமூகத்துக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களை நினைவுகூறுவதற்கும் நாடு முழுவதும் மே 4 ஆம் தேதி சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். பாரதியார் அறக்கட்டளை […]
திமுக ஆட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; டி. ஜெயக்குமார்
கோடை வெயிலால் பாதிக்கப்படும் மக்களை காக்கும் வகையில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிமுக மாணவரணி செயலாளர் எஸ் ஆர் விஜயகுமார் ஏற்பாட்டில் சென்னை அண்ணாநகர் திரு வி. க. பார்க் அருகே கோடை வெயிலினால் பாதிக்கப்படும் மக்களுக்கு தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெயிலால் பாதிக்கப்படும் மக்களுக்கு தர்பூசணி,இளநீர்,வெள்ளரிக்காய்,மோர், அண்ணாசி , சாத்துக்குடி உள்ளிட்ட பழ […]
தூத்துக்குடிவடக்கு மண்டல ஏஜி சபைகளின் சார்பில் கோவில்பட்டி தாமஸ்நகர் ஏஜிசபையில் ஆண்கள்ஐக்கியமுகாம் நடந்தது. கோவில்பட்டி ஏஜிசபையின் தலைமைபோதகர் பாக்கியநாதன் முகாமை தொடங்கி வைத்தார். எட்டயபுரம் ஏஜிசபையின் போதகர்பாலன் ஆராதனைநடத்தினார். பசுவந்தனை,தாமஸ்நகர், கோவில்பட்டி , எட்டயபுரம் , கடம்பூர் , கயத்தாறு , முத்துநகர் , இளையரசனேந்தல், நாலாம்டின்புத்தூர், கரடிகுளம்,பாண்டவர்மங்களம்,ஏழாயிரம்பண்ணை சபையின் பொறுப்பாளர்கள் ஆண்கள் 200பேர்கலந்துகொண்டனர். போதகர்கள் பாஸ்டர்பாலன், சுரேஸ்குமார், சங்கீதராஜ், இம்மானுவேல் , பீட்டர் , அந்தோனி ராஜ் , நெல்சன் , சாமுவேல் , மார்டின் […]
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வாணியர் மினி ஹாலில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் தியாகச்சுடர் திப்பு சுல்தான் நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவுக்கு முகவை முத்தமிழ் மன்ற தலைவரும், கம்பன் கழக பொதுச் செயலாளருமான கவிஞர் குத்புதீன் ஐபக் எனும் மானுடப் பிரியன் தலைமை தாங்கினார். முன்னதாக மவுலவி ஏ. முஹம்மது சபீக் ரஹ்மான் இறைவசனங்களை ஓதினார். இஸ்லாமிய இலக்கியக் கழக அமைப்பாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். கவிஞர் குத்புதீன் ஐபக் நூலை […]
தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி பேராசிரியர்கள் புவி வெப்பமயமாதலைத் தடுத்திட உறுதி மொழியேற்பு நடைபெற்றது. இயந்திரமயமாதலின் காரணமாக பூமி நாளுக்கு நாள் வெப்பமடைந்து வருகிறது. கடல்வாழ் உயிரினங்கள் அழியும் நிலையிலும், விவசாயம் விளிம்பு நிலையிலும் மற்றும் கடலோர நகரங்கள் மூழ்கும் அபாயத்திலும் உள்ளன. இளையதலை முறையினருக்கு நல்ல ஆரோக்கியமான புவியை உருவாக்கி கொடுத்தல் நம் கடமையாகும். ஆகையால், இப்புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்கு பேராசிரியர்களாகிய நாங்கள், ஒவ்வொரு ஆண்டின் இறுதி வேலை நாளன்று, ஆளுக்கொரு […]
சென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல்களை முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் இன்று திறந்துவைத்தார். அப்போது பொது மக்களுக்கு மோர், பழங்கள், குளிர் பானங்கள் உள்ளிட்டவை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, .முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்து சிகாகோ நகரத்தில் நடந்த புரட்சியில், தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி வெற்றி பெற்ற தினம் மே தினம். தியாகத்தால் உருவான தினம் தான் தொழிலாளர் தினம். இந்தியாவில் […]
கோவில்பட்டியில் உள்ள தமிழ்பாப்திஸ்து பள்ளிகளில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா இலுப்பையூரணி தமிழ் பாப்திஸ்து பள்ளியில் நடந்தது. தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றியம் அழகாபுரி தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அன்பின் செல்வி பணி நிறைவை முன்னிட்டு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பள்ளிகளின் தலைவர் லால்பகதூர் கென்னடி. தாளாளர் சுபாஷ் பாபுசிங் ஆகியோர் நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினர். சபை போதகர் ஜெயசிங்,தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன், நல்லாசிரியர் ராஜையா , குணசீலன், […]