கோவில்பட்டி கிருஷ்ணாநகர் பெத்தேல் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. காந்தி நகரை சேர்ந்த முருகன் பார் நடத்தி வருகிறார். இந்த பாரில் இந்திரா நகரை சேர்ந்த குருசாமி (வயது 60) என்பவர் வேலை பார்த்து வந்தார். கயத்தாறு சிதம்பரம்பட்டியை சேர்ந்த மூக்கையா பாண்டியன் என்பவர் கடந்த சில தினங்களாக வந்து மது அருந்திவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். வழக்கம்போல இன்று மதியம் 2 மணியளவில் டாஸ்மாக் பாருக்கு வந்த மூக்கையா பாண்டியன், மது […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர் சார்பில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் எதிர்புறம் உள்ள கலையரங்கில் நடத்தப்பட்டது. மேலும் அடைக்கலம் காத்தான் மண்டபம் அருகே இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன. திருவிழாவின் 10 வது நாள் நிகழ்ச்சியாக இன்று (புதன்கிழமை )பொங்கல் விழா நடந்தது. அதிகாலையில் தெற்கு நந்தவனம் சென்று புனித நீர் எடுத்து வந்து […]
பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டு மே 6ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 460 மாணவிகள் தேர்வு எழுதினர்.இதில் 433 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் மாணவி குருநந்தினி 582 மதிப்பெண் பெற்று அரசு பள்ளி அளவில் சாதனை படைத்துள்ளார். மாணவி கனிகா 569 மதிப்பெண்களும், மாணவி ஹரிணி 557 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 4 மாணவிகள் தலா ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் […]
திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு பயிற்சி டாக்டராக உள்ள நாகர்கோவில் பறக்கையை சேர்ந்த சர்வதர்ஷித், திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் ஷாம் மற்றும் வெங்கடேஷ், காயத்ரி, சாருகவி, நேசி ஆகிய 6 பேரும் நேற்று அங்கிருந்து கார் மூலமாக நாகர்கோவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தனர். நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்த இவர்கள் இங்கு தங்கினார்கள். இன்று காலை திற்பரப்பு அருவிக்கு 6 பேரும் காரில் சென்றனர். திற்பரப்பு அருவியில் […]
மறுமலர்சசி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, இன்று காலை தலைமைக் கழகம் தாயகத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.,கட்சி கொடி ஏற்றி வைத்து, லட்டு, பொங்கல், பழங்கல் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ ரத்ததானம் வழங்கி, ரத்ததான நிகழ்வைத் தொடங்கி வைத்தார். துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் – உயர்நிலைக் குழு உறுப்பினருமானசு.ஜீவன், […]
தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. கோவில்பட்டி நாடார் மேல் நிலை பள்ளியில் படித்த 311 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்கள்n302 பேர். தேர்ச்சி சதவீதம் 97% &
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 96.39 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வை தூத்துக்குடி மாவட்டத்தில் 8155 மாணவர்கள் எழுதினர். இதில் 7681 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 10423பேர் தேர்வெழுதியதில் 10,227பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 18,578பேர் தேர்வு […]
கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தின் திருவிழாவின் நிறைவு நாள் விழா நேற்று நடைபெற்றது. காலை 7மணிக்கு திருத்தலவளாகத்தில் அமைந்துள்ள திருப்பலி பீடத்தில் மேல இலந்தைகுளம் பங்குதந்தை ஜெயபாலன்,கோவில்பட்டி உதவிபங்குதந்தை அந்தோணிராஜ், காமநாயக்கன்பட்டி உதவி பங்குத்தந்தை செல்வின் இணைந்து திருவிழா திருப்பலி நிறைவேற்றி 15 பேருக்கு புது நன்மை வழங்கினார்கள். மாலை 6.30 மணியளவில் ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருச்சி இறையியல் கல்லூரி பேராசிரியர் அந்தோணிராஜ், கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல உதவி பங்குதந்தை அந்தோணிராஜ் இணைந்து […]
கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேசியமுற்போக்கு திரவிடகழகம் சார்பில் கோடைகால தண்ணீர்ப்பந்தல் கோவில்பட்டி அரசு மருத்துவமனை எதிரில் கடலையூர் ரோடு சந்திப்பில் திறக்கப்பட்டது, வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர்,ரோஸ் மில்க், மற்றும் பழங்கள் வழங்கினார்,இதில் நகரச்செயலாளர் நேதாஜிபாலமுருகன், ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி, பொன்ராஜ், செயற்க்குழுஉறுப்பினர் பிரபாகரன்,நகர நிர்வாகிகள் தவசிபாலு, ஆழ்வார், மதிமுத்து,கருப்பசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்
கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் 7ம் நாள் திருவிழா அன்று இரவு கோவில் கலையரங்கில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. ஆன்மிக சொற்பொழிவாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இதில் தலைமையாசிரியர் ஜான் கணேஷ், நாடார் உறவின் முறை சங்க பொருளாளர் சுரேஷ்குமார், வக்கீல் ரத்தின ராஜா உள்பட வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.