கோவில்பட்டி அரசு பள்ளி மாணவி, பிளஸ்-2 தேர்வில் 582 மதிப்பெண் பெற்று சாதனை
பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டு மே 6ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இதில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 460 மாணவிகள் தேர்வு எழுதினர்.இதில் 433 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களில் மாணவி குருநந்தினி 582 மதிப்பெண் பெற்று அரசு பள்ளி அளவில் சாதனை படைத்துள்ளார்.
மாணவி கனிகா 569 மதிப்பெண்களும்,
மாணவி ஹரிணி 557 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
4 மாணவிகள் தலா ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியின் தேர்ச்சி சதவிதம் 94% ஆகும்.
12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா, சாதனை படைத்த மாணவிகளை பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினார். ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மாணவிகளை பாராட்டினர்.