பிளஸ் -2 தேர்வு : கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்கள்
தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. கோவில்பட்டி நாடார் மேல் நிலை பள்ளியில் படித்த 311 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்கள்n302 பேர். தேர்ச்சி சதவீதம் 97% கணிப்பொறி அறிவியல் பாடத்தில் 14 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வணிகவியல் பாடத்தில் 6 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பள்ளிக்கூட அளவில் முதல் மதிப்பெண் (578) பெற்ற மாணவி சரமாரி. 2வது மதிப்பெண் (577) பெற்ற மாணவர் தினேஷ், 3 ம் இடம் (575) பெற்ற மாணவி அபிநயா ஆகியோர் சாதனை பிடித்து உள்ளனர்.
சாதனை மாணவர்களை நாடார் உறவின்முறை சங்க பொருளாளர் சுரேஷ்குமார், செயலாளர் ஜெயபாலன், பள்ளிச் செயலர் ஆர்.எஸ். ரமேஷ், நிர்வாகக்குழு உறுப்பினர் ஜோதி பாசு, தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் உட்பட பலர் பாராட்டினார்கள்.
முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.