• May 19, 2024

மதிமுக 31 ம் ஆண்டு தொடக்க விழா; தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றினார் வைகோ 

 மதிமுக 31 ம் ஆண்டு தொடக்க விழா; தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றினார் வைகோ 

மறுமலர்சசி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு,

இன்று காலை தலைமைக் கழகம் தாயகத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.,கட்சி கொடி ஏற்றி வைத்து, லட்டு, பொங்கல், பழங்கல் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ ரத்ததானம் வழங்கி, ரத்ததான நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் – உயர்நிலைக் குழு உறுப்பினருமானசு.ஜீவன், அரசியல் ஆய்வு மையச் செயலாளர் ஆவடி அந்திரிதாஸ், கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.கழககுமார், தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ப.சுப்பிரமணி, திருவள்ளுர் மாவட்டச் செயலாளர் மு.பாபு, செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் மா.வை.மகேந்திரன், காஞ்சி புறநகர் மாவட்டச் செயலாளர் கருணாகரன், ஆவடி மாநகர மாவட்டச் செயலாளரும், துணை மேயருமான சூர்யகுமார், தீர்மானக் குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன், மகளிர் அணிச் செயலாளர் மல்லிகா தயாளன், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன், சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் சிக்கந்தர், எழும்பூர் பகுதிச் செயலாளர் தென்றல் நிசார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *