ஒவ்வொரு வருடமும் ரோட்டரி சங்கங்களின் செயல்பாடுகளை மாவட்ட ஆளுநர் ஆய்வு செய்வது வழக்கம். தூத்துக்குடி டைட்டன்ஸ் ரோட்டரி சங்கத்திற்கு மாவட்ட ஆளுநரின் அதிகாரப்பூர்வ வருகையை முன்னிட்டு மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை சங்கத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார் ..இதில் ரோட்டரி சங்க புதிய உறுப்பினர்களாக முத்துகிருஷ்ணன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்தனர்..இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி டைட்டன்ஸ் ரோட்டரி சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட உதவி ஆளுநர் முத்துச்செல்வன்,மாவட்டச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள் ஆகியோர் […]
தீப்பெட்டி தொழிலாளர்கள், மீனவர்கள் வாழ்வாதாரம் உயர பாடுபடுவேன். ; தூத்துக்குடி அதிமுக வேட்பாளர்
மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வேட்பு மனு ஏற்கப்பட்ட பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-‘ தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, அவரது கணவர், மற்றும் மகன் ஆகியோர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர். மேலும் அவரது மகன் வங்கி கணக்கில் பான் கார்டு இல்லாமல் 15 […]
மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பான புகாா்களை பொதுத்தோ்தல் பாா்வையாளரிடம் தெரிவிக்க சிறப்பு கைப்பேசி எண் வெளியிடப்பட்டுள்ளதாக, மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மக்களவைத் தோ்தலையொட்டி, இந்திய தோ்தல் ஆணையம் மூலம் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பொதுத் தோ்தல் பாா்வையாளராக திவேஷ் ஷெஹரா நியமிக்கப்பட்டுள்ளாா். அவா், தோ்தல் நடைமுறைகள் நிறைவடையும்வரை இம்மாவட்டத்தில் தங்கியிருந்து தோ்தல் பணிகளைப் பாா்வையிடுவாா். எனவே, தோ்தல் நடத்தை விதிகள், செலவினங்கள், […]
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் வக்கீல் ஹென்றி திபேன் தாக்கல் செய்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நீதிபதிகள் பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் […]
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைத் தேர்தலையொட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி , இந்தியா கூட்டணியின் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து திறந்த வேனில் சென்று தேர்தல் பிரசாரம் செய்து வாக்குச் சேகரித்தார். கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள கிருஷ்ணராயபுரம் கடைவீதி, வெங்கமேடு அண்ணா சிலை அருகில், க.பரமத்தி கடைவீதி ஆகிய பகுதிகளில் கூடி நின்ற மக்களைச் சந்தித்து,கை சின்னத்திற்கு வாக்கு அளிக்கப் பிரச்சாரம் செய்தார். […]
தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்.பி.கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்-ஸ்டாலின் இரங்கல்
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடைபெற இருக்கும் தேர்தலில் ஈரோடு தொகுதிக்கு பதிலாக திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.. கூடுதலாக தொகுதி ஒதுக்கப்படாததால் கணேசமூர்த்தி மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த கணேசமூர்த்தி கடந்த 24-ந் தேதி அன்று அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது, […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் ஜான் பாண்டியன் களத்தில் இருக்கிறார். தனிச்சின்னத்தில் போட்டியிடுவேன் என்று அறிவித்து இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி , டிவி சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார். ஆனால் தேர்தல் ஆணையம் இன்னும் சின்னத்தை ஒதுக்கவில்லை. இந்நிலையில், தென்காசி தொகுதியில் […]
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 25ந்தேதி நல்ல நாள் என்பதால் பிரதான அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் அன்றைய தினம் மட்டும் 405 வேட்பு மனுக்கள் பெறப்பட்டனமத்திய சென்னை தொகுதியில் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணன் உள்பட 9 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்தி.மு.க. வேட்பாளர் […]
தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யக்கூடிய ஆட்சி மத்தியில் வரவேண்டும்; தூத்துக்குடி பிரசாரத்தில் கனிமொழி பேச்சு
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி தருவைக்குளத்தில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். தொடர்ந்து, புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், ஓசானுத்து, வாஞ்சி மணியாச்சி, அக்கநாயக்கன்பட்டி, மருதன்வாழ்வு, ஆயிரவன்பட்டி ஆகிய பகுதிகளில் கூடி நின்ற மக்களைச் சந்தித்து,உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின்போது கனிமொழி பேசியதாவது: கடந்த தேர்தலில் வேட்பாளராக நான் களம் கண்ட போது, எதிர்க்கட்சிகள் இவர் சென்னையில் இருந்து வருகிறார். வெற்றி பெற்றால் மீண்டும் தூத்துக்குடி வரமாட்டார் எனக் கூறினர். வெற்றி பெற்ற பின்னர் இங்கு […]
. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக அறையினை பார்வையிட்டார். கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற […]