தூத்துக்குடி டைட்டன்ஸ் ரோட்டரி சங்க செயல்பாடுகள்; மாவட்ட ஆளுநர் ஆய்வு
ஒவ்வொரு வருடமும் ரோட்டரி சங்கங்களின் செயல்பாடுகளை மாவட்ட ஆளுநர் ஆய்வு செய்வது வழக்கம். தூத்துக்குடி டைட்டன்ஸ் ரோட்டரி சங்கத்திற்கு மாவட்ட ஆளுநரின் அதிகாரப்பூர்வ வருகையை முன்னிட்டு மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை சங்கத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்
..இதில் ரோட்டரி சங்க புதிய உறுப்பினர்களாக முத்துகிருஷ்ணன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்தனர்..இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி டைட்டன்ஸ் ரோட்டரி சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட உதவி ஆளுநர் முத்துச்செல்வன்,மாவட்டச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் ரஞ்சித் நடேஷ் ஆண்டறிக்கை வாசித்தார்.
ரோட்டரி மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, முத்துமுருகன், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் பாலமுருகன், ராதாகிருஷ்ணன் உள்பட ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ரோட்டரி சங்க உறுப்பினர் மகேஷ் நன்றி கூறினார்.