• April 27, 2024

சங்கரா கிட்ஸ் பள்ளியில் பட்டமளிப்பு விழா

 சங்கரா கிட்ஸ் பள்ளியில் பட்டமளிப்பு விழா

கோவில்பட்டி சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளியின் பட்டமளிப்பு விழா நாடார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

இதில் யுகேஜி யிலிருந்து முதல் வகுப்பிற்கு தகுதி பெற்ற இளம் மழலையர்களுக்கு பட்டமளிப்பு செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்க துணைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

சங்க பொருளாளர் சுரேஷ்குமார்,பத்ரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளிச் செயலாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார்.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கோவில்பட்டி கிளை உதவி மேலாளர் செல்வராஜ் கலந்துகொண்டு மழலை குழந்தைகளுக்கு பட்டம் வழங்கி பாராட்டினார்.

விழாவில்  பள்ளி குழு உறுப்பினர்கள் ராஜா அமரேந்திரன், மணிக்கொடி, பொன் ராமலிங்கம், ரவிச்சந்திரன்,சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளி முதல்வர் மீனா,நாடார் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை செல்வி,முன்னாள் மாணவர் வேல்முருகன்,ஆசிரியர்கள் சகாயகலாவதி,சாந்தினி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *