• April 27, 2024

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் முடிந்தது;இன்று மனுக்கள் பரிசீலனை

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

25ந்தேதி நல்ல நாள் என்பதால் பிரதான அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் அன்றைய தினம் மட்டும் 405 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன
மத்திய சென்னை தொகுதியில் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணன் உள்பட 9 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்
தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறன் இன்று மனு தாக்கல் செய்தார்.. தென்சென்னை தொகுதியில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட 9 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த தொகுதியில் நேற்று வரை 22 பேர் மனு அளித்துள்ளனர்.
கடலூர் தொகுதியில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் உள்பட 6 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 14 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்
விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் உள்பட 3 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 9 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர் சதீஷ்குமார், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஸ்டீபன்ராஜ் ஆகிய 2 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும் . அன்றைய தினம் மதியம் 3 மணி வரை மனுக்களை வாபஸ் பெறலாம். இதைத்தொடர்ந்து அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன்பின்பு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.

வேலூர் தொகுதியில் நேற்று ஒரே நாளில் 12 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் களம் காண்கிறார். அவர் ஏற்கனவே மனு தாக்கல் செய்து விட்டார். அவரது பெயர் கொண்ட 5 பேர் சுயேச்சையாக தாக்கல் செய்யாத பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் மனுக்களை தாக்கல் செய்தனர்.

பொதுவாக கடைசி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பிரதான கட்சியை சேர்ந்த பெரும்பாலானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில் கடைசி நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லை.

.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *