தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்.பி.கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்-ஸ்டாலின் இரங்கல்
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நடைபெற இருக்கும் தேர்தலில் ஈரோடு தொகுதிக்கு பதிலாக திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.. கூடுதலாக தொகுதி ஒதுக்கப்படாததால் கணேசமூர்த்தி மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த கணேசமூர்த்தி கடந்த 24-ந் தேதி அன்று அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது, இதையடுத்து கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிர் இழந்தார். காலை 5 ,மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்து போனதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது..
முதல் அமைச்சர் இரங்கல்
இந்த சம்பவம் அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திமுகவில் தநதனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், ஒருங்கிணைந்தமாவட்ட கழக செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை திறம்பட ஆற்றியவர்..
பின்னர் அண்ணன் வைகோ அவர்களுடன் இணைந்து பயணப்பட்டார். ஆற்றல்மிகு தளகர்த்தாவாக செயல்பட்ட அவரது இழப்பு சொல்லொணா துயரத்தை தருகிறது. அவரது பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்களுக்கும், திராவிட இயக்க பற்றாளர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்,
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
வைகோ ‘
மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறியதாவது:-
கணேச,மூர்த்த்தியின் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது. கணேசமூர்த்தி துணிச்சலானவர். மன உறுதி கொண்டவர். அவர் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை.
எம்.பி.சீட் கிடைக்காததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி துளியளவு கூட உண்மையில்லை. கணேசமூர்த்தி இறந்து விட்டடர் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவருக்கு ஆழந்த அஞ்சலியை செலுத்துகிறோம்,.
இவ்வாறு வைகோ கூறினார்.