திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஆரல்வாய்மொழி, நாகா்கோவில், கன்னியாகுமரி ரெயில் வழித்தடத்தில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்று (மாா்ச் 29) முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து காலை 10.35க்கு புறப்படும், 06643 கன்னியாகுமரி ரெயில், மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து காலை 8.20க்கு புறப்படும், 06628 கொச்சுவேலி ரெயில் மார்ச் 29ம் தேதி […]
திருப்பூர், நல்லூர் தேவாலயம் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த 36 வயது மதிக்கத்தக்க பெண் மது போதையில் இருந்தார். இடுப்பில் ரூ.1½ லட்சம் வைத்து இருந்தார். அத்தனையும் 500 ரூபாய் நோட்டுகள். அந்த பெண்ணிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் என்றும், பண்ணாரி அம்மன் கோவிலில் பிச்சை எடுத்த பணம் என்றும் அவர் கூறினார். உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை […]
பயிற்சியில் பங்கேற்காத வாக்குசாவடி அலுவலர்கள் 795 பேருக்கு நோட்டீஸ் ; ஆட்சியர் லட்சுமிபதி
.தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி கடந்தவாரம் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக 9 ஆயிரத்து 781 பேருக்கு ஆணை அனுப்பப்பட்டது. இதில் 1,949 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 1,949 வாக்குச்சாவடிஅலுவலர் நிலை-1, 1949 வாக்குச்சாவடி அலுவலர்நிலை, 1,949 வாக்குச்சாவடிஅலுவலர் நிலை-III, 238 வாக்குச்சாவடிஅலுவலர் நிலை- IV மற்றும் 1,988 […]
தூத்துக்குடி தமாகா வேட்பாளர் விஜயசீலன் வெற்றிக்கு ஒற்றுமையுடன் உழைக்க கட்சி தொண்டர்கள் உறுதி
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் எஸ் டி ஆர் விஜயசீலனை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட மேற்பார்வையாளர் போத்தீஸ் ராமமூர்த்தி மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சரவண கிருஷ்ணன், வேல் ராஜா, கிஷோர் ,பொருளாளர் கே கே ஆர் கணேசன், அனைத்து மண்டல் தலைவர்கள் அணி பிரிவுகளின் மாவட்ட தலைவர்கள் மாநிலச் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு […]
இயேசு கிறிஸ்து பெரிய வியாழன் அன்று யூதாசால் காட்டிக் கொடுக்கப்பட்டு பெரிய வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை தழுவி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வருவார். பெரிய வியாழனன்று இயேசு கிறிஸ்து மூன்று முக்கிய நிகழ்வுகளை நிகழ்த்தினார் 1. தன் சீடர்களுடன் அமர்ந்து தான் கடைசி இரவு உணவு உட்கொண்டு நற்கருணையை ஏற்படுத்தினார் . 2 . தன் சீடர்களின் பாதங்களை கழுவி தன் மேலாடையால் துடைத்து முத்தமிட்டு நான் உங்களுக்கு பணிவிடை செய்வது போல நீங்களும் […]
சென்னை ராயபுரத்தில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தலைமை தேர்தல் பணிமனையை கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் மற்றும் வடசென்னை தொகுதி பொறுப்பாளருமான டி.ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் எம்.ஜி.ஆர்.,ஜ ஜெயலலிதா ஆகியோரது திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது,; மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வாதிகார ஆட்சிக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். வேட்பு மனு தாக்கல் செய்யும் நடைமுறையை திமுக அரசும், […]
கோவில்பட்டி திருமங்கை நகரில் ஐஸ்வர்ய வீரலட்சுமி நரசிங்கபெருமாள் ஆலயம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் வீரலட்சுமி நரசிம்மர் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேக விழா 25-ந் தேதி தொடங்கியது,.,தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது, இரவில் ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடந்தன,. பல்வேறு நதிகளில் இருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்,. மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இரவில் […]
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து அவரது பெயரை போலவே பன்னீர்செல்வம் என பெயர்கொண்ட 4 பேர் சுயேட்சையாக அந்த தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர். இந்த சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே போன்று சம்பவம் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அதன் கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி இரட்டை […]
தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகணேஷ் இவர் கடந்த 8ம் தேதி தனது காதலியுடன் முத்துநகர் கடற்கரை பூங்காவிற்கு சென்றார். அங்கு இளைப்பாறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள குடை போன்ற பகுதியில் பிற்பகலில் யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் இருவரையும் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் இருவரையும் மிரட்டிய அந்த வாலிபர் இருவரது புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதுடன் படத்தை வெளியிடாமல் இருக்க பால கணேசன் காதலியிடமிருந்து அவர் […]
கோவில்பட்டி சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளியின் பட்டமளிப்பு விழா நாடார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் யுகேஜி யிலிருந்து முதல் வகுப்பிற்கு தகுதி பெற்ற இளம் மழலையர்களுக்கு பட்டமளிப்பு செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்க துணைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் சுரேஷ்குமார்,பத்ரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளிச் செயலாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கோவில்பட்டி கிளை உதவி மேலாளர் செல்வராஜ் கலந்துகொண்டு மழலை குழந்தைகளுக்கு […]