பயிற்சியில் பங்கேற்காத வாக்குசாவடி அலுவலர்கள் 795 பேருக்கு நோட்டீஸ் ; ஆட்சியர் லட்சுமிபதி நடவடிக்கை
.தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி கடந்தவாரம் நடத்தப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக 9 ஆயிரத்து 781 பேருக்கு ஆணை அனுப்பப்பட்டது.
இதில் 1,949 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 1,949 வாக்குச்சாவடிஅலுவலர் நிலை-1, 1949 வாக்குச்சாவடி அலுவலர்நிலை, 1,949 வாக்குச்சாவடிஅலுவலர் நிலை-III, 238 வாக்குச்சாவடிஅலுவலர் நிலை- IV மற்றும் 1,988 மாற்று அலுவலர்களுக்கு ஆணை அனுப்பப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் 795 அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் பயிற்சியில் பங்கேற்காத 795 பேருக்கும், மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் -1951 பிரிவு 134-ன்கீழ் ஏன் நடவடிக்கை எடுக்ககூடாது என்று விளக்கம் கேட்டு தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி விளக்கம் கேட்டு, குறிப்பாணை (நோட்டீஸ் ) அனுப்பி உள்ளார்.
இந்த குறிப்பாணை குறித்து எழுத்து பூர்வமாக விளக்கத்தை 2 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக்தில் சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது தேர்தல் விதிமுறைகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்து உள்ளார்.