கோவில்பட்டி திருமங்கை நகர் வீரலட்சுமி நரசிங்கபெருமாள் கும்பாபிஷேகம்
கோவில்பட்டி திருமங்கை நகரில் ஐஸ்வர்ய வீரலட்சுமி நரசிங்கபெருமாள் ஆலயம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் வீரலட்சுமி நரசிம்மர் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.
இதற்கான கும்பாபிஷேக விழா 25-ந் தேதி தொடங்கியது,.,தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது, இரவில் ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடந்தன,.
பல்வேறு நதிகளில் இருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து இருந்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்,. மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இரவில் ஐந்து கருட சேவை திருவீதி புறப்பாடு நடக்கிறது. நாளை முதல் 41 நாட்கள் மண்டல ஆராதனம் நடைபெறுகிறது.