`மகாகவிதை’ நூலுக்காக மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) வழங்கின கவிஞர் வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகாகவிதை’ நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதை தொடர்ந்து கடல் தாண்டியும் கவனத்தை ஈர்த்து வருகிறது. மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து வைரமுத்துவின் சாதனை படைப்பான ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ மற்றும் 1 லட்சம் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சென்னை MERF அறக்கட்டளை இணைந்து காது மற்றும் பேச்சு குறைபாடுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச பரிசோதனை செய்து செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு காதொலி கருவிகள் வழங்கப்படுகிறது. இதற்கான முகாம் இன்று (9/3/2024) தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி கலை அரங்கத்தில் நடந்தத்தது.தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இலவச மருத்துவ பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார். முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 26 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.24.96 லட்சம் மதிப்பிலான […]
பிரபல நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் தனித்துப் போட்டி யிட்டு வந்தார். இந்த நிலையில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினை கமலஹாசன் சந்தித்து பேசினார். அப்போது 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது என்ற முடிவை கமல்ஹாசன் அறிவித்தார். 2025 […]
மகா சிவராத்திரி முன்னிட்டு நேற்று இரவு சிவன் கோவில்களில் நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. அதன்படி கோவில்பட்டி பூவனநாத சுவாமி கோவிலில் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பங்கேற்க இரவு 7 மணியிலிருந்தே கோவிலுக்கு பக்கத்தில் வரத் தொடங்கினர். 8 மணி அளவில் கோவில் நிரம்பி விட்டது. இரவு 9 மணிக்கு முதல் கால பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம் கால பூஜை, அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை […]
சென்னை ராயபுரம் ஆட்டுத்தொட்டி பகுதியில் அதிமுக மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் பி. ஜெயக்குமாரி விசு ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கலந்து கொண்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பகுதி செயலாளர்கள் ஏடி அரசு, வி எம் மகேஷ், திரு வி க நகர் வடக்கு பகுதி செயலாளர் முகுந்தன் கோபால், திரு வி க நகர் […]
கோவில்பட்டி ஜி. வி. என். கல்லூரி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் 10-3-2024 (ஞாயிற்றுக்கிழமை ) நடக்கிறது. ஜி. வி. என்.கல்லூரி சுயநிதி பாடப்பிரிவுகள் வளாகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை முகாம் நடைபெறும். கண் புரை நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யப்படும். முகாமிற்கு வருபவர்கள் ஆதார் கார்டு ஜெராக்ஸ் மற்றும் மொபைல் கொண்டு வரவேண்டும். முகாம் நடக்கும் இடத்துக்கு […]
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில்இருந்து கோயம்புத்தூர் மற்றும் திரேஸ்புரத்திலிருந்து பேராவூரணி ஆகிய 2 தொலைதூர பஸ்கள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களை திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பேருந்தில் பயணித்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளை கனிமொழி எம்.பி வழங்கினார். இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை […]
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று அதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு […]
பெண்களைப் போற்றும் வகையில், உலக மகளிர் தினமான இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். . இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நடிகர் அஜித்குமார் சில நாட்களுக்கு முன்பு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெளிநாட்டில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டபிறகு சென்னை வந்திருந்த போது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். மீண்டும் வெளிநாடு பயணம் தொடர்பாக நடத்தப்படும் வழக்கமான உடல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரி அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அஜித்குமாரின் மூளையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உடல் பரிசோதனையின் போது அவரது மூளையில் சிறிய கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை மற்றும் கேரளாவில் இருந்து சிறப்பு டாக்டர் […]