தேர்தல் நேரத்தில் சிலிண்டர் விலை குறைப்பு: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சென்னை MERF அறக்கட்டளை இணைந்து காது மற்றும் பேச்சு குறைபாடுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச பரிசோதனை செய்து செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு காதொலி கருவிகள் வழங்கப்படுகிறது.
இதற்கான முகாம் இன்று (9/3/2024) தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி கலை அரங்கத்தில் நடந்தத்தது.தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இலவச மருத்துவ பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 26 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.24.96 லட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை கனிமொழி கருணாநிதி வழங்கினார்.

இம்முகாமில் 33 மருத்துவர்கள் கலந்துகொண்டு மருத்துவத்துறையில் உள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சை அளித்தனார்.
இன்றைய தினம் நடைபெற்ற முகாமில் 150க்கும் மேற்பட்ட காது மற்றும் பேச்சு குறைபாடுள்ள குழந்தைகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இம்முகாம் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில்,, சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, MERF அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் எம்.பிரபு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், தலைமை மருத்துவர் (MERF அறக்கட்டளை) மரு.ரஞ்சித், உதவி தலைமை மருத்துவர் பச்சையப்பன், வட்டாட்சியர் பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி கூறியதாவது :-
சமையல் எரிவாயு விலையை குறைத்து இருக்க முடியும் என்றால் முன்பே குறைத்திருக்கலாம். தேர்தல் வரும் நேரத்தில் சிலிண்டர் விலையை குறைத்துள்ளனர். மகளிர் தினத்தன்று சிலிண்டர் விலையை குறைப்பது பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டுமே கவலை. மற்றதை பற்றி கவலை இல்லை என்பது போல் உள்ளது. வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம், எவ்வளவோ விஷயங்களை செய்யலாம்.
சிலிண்டர் விலையை குறைத்து இருப்பது சமையல் அறையிலேயே பெண்கள் இருக்கக்கூடிய ஒரு விஷயமாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
