நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் கட்டி; அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

நடிகர் அஜித்குமார் சில நாட்களுக்கு முன்பு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெளிநாட்டில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டபிறகு சென்னை வந்திருந்த போது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மீண்டும் வெளிநாடு பயணம் தொடர்பாக நடத்தப்படும் வழக்கமான உடல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரி அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் அஜித்குமாரின் மூளையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உடல் பரிசோதனையின் போது அவரது மூளையில் சிறிய கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையொட்டி மதுரை மற்றும் கேரளாவில் இருந்து சிறப்பு டாக்டர் வரவழைக்கப்பட்டு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு மூளையில் இருந்து கட்டி அகற்றப்பட்டது.
தற்போது அஜித் குமார் உடனே சீராக உள்ளது என்றும், இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் ஆஸ்பத்திரி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
